தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  K. Rajan: 'ரசிகர்களை அஜித் மதிக்கவில்லை' - தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு

K. Rajan: 'ரசிகர்களை அஜித் மதிக்கவில்லை' - தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு

Aarthi V HT Tamil
Aug 27, 2023 10:40 AM IST

அஜித் ரசிகர்கள் கண்டு கொள்வது இல்லை என திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றம் சாட்டி உள்ளார்.

தயாரிப்பாளர் கே.ராஜன்   -கோப்பு படம்
தயாரிப்பாளர் கே.ராஜன் -கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் கூறுகையில், “அஜித் ஒரு மர்ம மனிதர். சினிமாவில் எவ்வளவு தொழிலாளர்கள், நடிகர்களை நம்பி இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு இரண்டு படமாவது கொடுக்க வேண்டும். ரசிகர்கள் ஏங்கி தவிக்கிறார்கள்.

அவர் ரசிகரை பார்க்க மாட்டார், பொது மக்களை பார்க்க மாட்டார். ஆனால் ரசிகர்கள் அவர் மேல் உயிரை வைத்து இருக்கிறார்கள். இப்படி ஒரு அதிசயம் யாருக்கும் கிடைக்காது.

ரசிகர் மன்றத்தை எடுத்துவிட்டார், ஆனால் ரசிகர்கள் அவர் மேல் உயிரை வைத்து இருக்கிறார்கள். அஜித் ரசிகர்களை விரும்ப வேண்டும். எம்ஜிஆர் அதை செய்த காரணத்தினால் தான் அவர் பெயர் இன்னுமும் நிலைத்து நிற்கிறது. ஆனால் அஜித் ரசிகர்களை வெறுக்கிறாரா என தெரியவில்லை, கண்டு கொள்வது இல்லை. எல்லாரும் வேலையை பாருங்கள் என சொல்கிறார். ஆனால் அதிர்ஷடம் அவரை விடவில்லை. பெரிய வசூலை இளைஞர்கள் கொடுக்கிறார்கள்" என்றார்.

நடிகர் அஜித் நடிக்க இருக்கும், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இழுத்தடித்து வந்ததால் இப்படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர், விடாமுயற்சி கண்டிப்பாக உருவாகும். விரைவில் சூட்டிங் தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்