புதிய பாலியல் குற்றச்சாட்டு..மீ டூ வழக்கில் சிறையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு புற்றுநோய் பாதிப்பு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புதிய பாலியல் குற்றச்சாட்டு..மீ டூ வழக்கில் சிறையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு புற்றுநோய் பாதிப்பு

புதிய பாலியல் குற்றச்சாட்டு..மீ டூ வழக்கில் சிறையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு புற்றுநோய் பாதிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 23, 2024 10:58 AM IST

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு நாள்பட்ட மைலோயிட் லுகேமியா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு நியூயார்க் சிறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது.

மீ டூ வழக்கில் சிறையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு புற்றுநோய் பாதிப்பு
மீ டூ வழக்கில் சிறையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு புற்றுநோய் பாதிப்பு

ஹார்வியின் சட்டப்பூர்வ சுகாதாரப் பிரதிநிதி கிரேக் ரோத்ஃபீல்ட், ஹார்வியின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, அவரது உடல்நிலை குறித்து ​​கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

ஹார்வி வெய்ன்டீனுக்கு ஏற்பட்ட உடல் நலப்பிரச்னை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜூலை மாதம், ஹார்வி, கோவிட்19 மற்றும் இரு நுரையீரலிலும் உள்ள நிமோனியா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக நியூயார்க் நகர சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ஸ்பைனல் ஸ்டெனோசிஸ், அவரது இதயம் மற்றும் நுரையீரலில் திரவம் ஆகியவை அவருக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டிய மற்ற நிபந்தனைகள் காரணமாகவும், இதய அறுவை சிகிச்சைக்காகவும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஹார்விக்கு முன்னதாக மார்ச் 2020 இல் நியூயார்க் சிறையில் கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கொரோனா வைரஸுடன் இருந்த நிலையில், சில வாரங்களில் இதய பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான தண்டனை தீர்ப்பு வழங்கிய பிறகு மார்பு வலி மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் குறித்து புகார் செய்தார்.

ஹார்வி மீதான பாலியல் வழக்கு விசாரணை

கடந்த 2020இல் #MeToo இயக்கம் விஸ்வரூபம் எடுத்தபோது அந்த ஆண்டு பிப்ரவரியில், பல்வேறு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி என நிருபிக்கப்பட்டார்.

இதையடுத்து கட்டாய பாலியல் உறவு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தன் மீதான குற்றச்சாட்டுக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் ஹார்வி வழக்கில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்தது.

திரைப்பட தயாரிப்பாளரான இவரின் தவறான நடத்தை தொடர்பாக குற்றம் சாட்டிய பெண்களிடமிருந்து சாட்சியங்களைக் கேட்டிருக்கக்கூடாது. ஆனால் அவர்களின் குற்றச்சாட்டுகள் வழக்கின் ஒரு பகுதியாக இல்லை என வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் சிறையில் இருந்து வருகிறார். அதேபோல் முந்தைய குற்றப்பத்திரிகையில் இருந்து ஹார்வி மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் நிலை குற்றவியல் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மூன்றாம் நிலை கற்பழிப்பு குற்றச்சாட்டு ஆகியவை அடங்கும். கடந்த செப்டம்பரில் நடந்த விசாரணையில் அவர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

மீ டூ புகார்

உலகம் முழுவதும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் மீடூ இயக்கத்தின் மூலம், தங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை பாதிக்கப்பட்ட பலரும் வெளிப்படுத்தினர். இதில் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் கட்டாய பாலியல் வன்புணர்வு புகார்களை நடிகைகள் பலரும் அடுக்கினர். அவர் மீது 80க்கும் மேற்பட்ட நடிகைகள், மாடல் அழகிகள் என பலரும் புகார் அளித்திருந்தனர்.

இந்த வழக்கில் வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என ஹேட்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நடிகைகள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.