Actor Vimal: உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை..தயாரிப்பாளர், பைனான்சியர் மீதான விமல் வழக்கு ரத்து செய்து உத்தரவு
Actor Vimal: உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி தயாரிப்பாளர், பைனான்சியர் மீது நடிகர் விமல் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Actor Vimal: உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை..தயாரிப்பாளர், பைனான்சியர் மீதான விமல் வழக்கு ரத்து செய்து உத்தரவு
தமிழ் சினிமாக்களில் ஹீரோவாக நடித்து வரும் விமல் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்த படம் மன்னர் வகையறா. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாத இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் தோல்வியை தழுவியது.
இதற்கிடையே இந்த படத்தை தயாரிப்பதற்காக நடிகர் விமலுக்கு, பைனான்சியர் கோபி என்பவர் ரூ. 5 கோடி கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. படத்தின் வெளியீட்டின் போது விமல் கடன் தொகையை திருப்பு கொடுக்க முடியவில்லை.
விமல் மீது மோசடி வழக்கு
இதனால் படங்களில் நடித்தும், வேறு படங்களை தயாரித்து அதிலிருந்து வரும் லாபத்திலிருந்தும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக 2018ஆம் ஆண்டு நடிகர் விமல் உத்தரவாதம் அளித்திருந்தார்.