“13 வயசு பொண்ண அவர் மாமாவே.. நானே சாட்சி.. வீடுகளில் உச்சக்கட்ட பாலியல் தொந்தரவு! - அதிர்ச்சிக்கொடுத்த சின்மயி
சின்மயி மீடூ மூவ்மெண்டில் 13 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை குறித்தும், வீடுகளில் நடக்கும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசி இருக்கிறார்.

“13 வயசு பொண்ண அவர் மாமாவே.. நானே சாட்சி.. வீடுகளில் உச்சக்கட்ட பாலியல் தொந்தரவு! - அதிர்ச்சிக்கொடுத்த சின்மயி
பிரபல பாடகியும், தொழிலதிபருமான சின்மயி அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அதில், அவர் மீடூ மூவ்மெண்ட் குறித்தும், அதில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்தும் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “முற்போக்கு பேசும் தமிழ்நாட்டில்தான் பாலியல் வன்கொடுமை பற்றி பேசிய என்னை, தொழில் செய்யவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் வேறெங்கும் இந்த அவல நிலை கிடையாது. இதை உலகெங்கும் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். நான் பொய் கூறினேன் என்று கூறிய எல்லோரும் என் கண் முன்னாலேயே அதற்காக மிகப்பெரிய விலையை கொடுத்தார்கள்.
