செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய பிரபல நடிகர்.. கடும் கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய பிரபல நடிகர்.. கடும் கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள்!

செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய பிரபல நடிகர்.. கடும் கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள்!

Divya Sekar HT Tamil Published Dec 11, 2024 07:25 AM IST
Divya Sekar HT Tamil
Published Dec 11, 2024 07:25 AM IST

செய்தி சேகரிப்பதற்காக நடிகர் மோகன் பாபு வீட்டுக்கு சென்ற செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய மோகன் பாபு மற்றும் அவருடைய பாதுகாவலர்கள்.

செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய பிரபல நடிகர்.. கடும் கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள்!
செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய பிரபல நடிகர்.. கடும் கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள்!

ஆந்திராவை சேர்ந்தவர் நடிகர் மோகன் பாபு. தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மோகன் பாபுவுக்கு தற்போது 72 வயது ஆகிறது. இவர் தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். 

இரண்டு பேரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார்

மோகன் பாபுவுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தான் மகன் மனோஜ் மஞ்சு மற்றும் நடிகர் மோகன் பாபு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நடிகர் மோகன் பாபு, அவருடைய மகன் மஞ்ச் மனோஜ் ஆகியோரிடையே சொத்து,, பாதுகாப்பு, குடும்ப கவுரவம் ஆகியவை தொடர்பாக பெரும் பிரச்சனை ஏற்பட்டு இரண்டு பேரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

மோகன் பாபு தனது புகாரில் கூறியதாவது, ”மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார். எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன். எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்” என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

மைக் மூலம் செய்தியாளர்களை தாக்கிய மோகன் பாபு 

அந்த புகார் மீது தற்போது விசாரணை நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனவே இது பற்றி செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் ஹைதராபாத்தில் உள்ள மோகன் பாபு வீட்டிற்கு சென்றனர். மூத்த நடிகர்,அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் ஆகியவை உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்ட மோகன் பாபுவும், அவருடைய பாதுகாவலர்களும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை கொடூரமாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கை பிடுங்கி அந்த மைக் மூலம் செய்தியாளர்களை மோகன் பாபு தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நடிகர் மோகன் பாபுவின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோகன் பாபு தனது செயலுக்கு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று இரவில் பத்திரிகையாளர்கள் வீட்டு முன்பு கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் மோகன் பாபு வீட்டில் இரவு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.