‘விஜய் கூத்தாடி என்றால்.. உதயநிதி யார்? இதை தான் அம்பேத்கர் கேட்கிறார்’ ராஜ் மோகன் அட்டாக்!
‘ஆதவ் ஆர்ஜூனா யார்? அவர் முந்தா நாள் வந்தவரு, அவர் எப்படி விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆகலாமா? என்று கேட்கிறா்கள். சரி தான், அப்படி தான் கேட்க வேண்டும். அப்போ, முந்தா நேத்து வந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகலாமா? எப்போது எம்.எல்.ஏ., ஆனார்? எப்போ அமைச்சர் ஆனார்?’

பிரபல மேடை பேச்சாளர் ராஜ்மோகன், புதியதலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் போது, விஜய்க்கு எதிரான கருத்துக்களுக்கு பதிலடி அளித்தார். இதோ அவருடைய பேச்சு:
‘‘புத்தக வெளியீட்டு விழாவை, விஜய்க்கான மேடை என்று கூறுகிறார்கள். நான் சொல்வேன், அது அம்பேத்கருக்கான மேடை. எந்த புத்தக வெளியீட்டு விழாவையும், அதன் நோக்கத்தை தான் பேச வேண்டும். இந்த நூலின் நோக்கமே, தலித் அல்லாதவர்களிடம் அம்பேத்கரை கொண்டு சேர்க்க வேண்டும், ஜாதி தலைவர் அல்ல அம்பேத்கர், சாதித்த தலைவர் என்பதை நிறுவ வேண்டும் என்பது தான். எத்தனையோ மாற்று கருத்து, மாற்று எண்ணம் கொண்ட எழுத்தாளர்கள் சேர்ந்து தான், அந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களும் அந்த அரங்கத்தில் தான் இருந்தனர்.
உதயநிதிக்கு ஒரு நியாயம்.. ஆதவ் அர்ஜூனாவுக்கு?
நேற்று நடந்தது, சமீபத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஆகப்பெரிய அம்பேத்கரிய விழா. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இரண்டாவது, ஆதவ் ஆர்ஜூனா யார்? அவர் முந்தா நாள் வந்தவரு, அவர் எப்படி விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆகலாமா? என்று கேட்கிறா்கள். சரி தான், அப்படி தான் கேட்க வேண்டும். அப்போ, முந்தா நேத்து வந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகலாமா? எப்போது எம்.எல்.ஏ., ஆனார்? எப்போ அமைச்சர் ஆனார்? எப்படி துணை முதல்வர் ஆனார்? இந்த கேள்வியை தான், அம்பேத்கர் கேட்கச் சொல்கிறார்.