80 வயதில் காதல்...பாரதிராஜா மனதை கொள்ளையடித்த அந்த டீச்சர் யார்?
Bharathiraja in Love: வாத்தி படத்தின் நாயகி சம்யுக்தா மீது காதல் வயப்பட்டுள்ளதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது இயக்குநர் இமயம் பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறியிருப்பதோடு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து கலகலப்பூட்டினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தனுஷின் தோழியான நித்யா மேனன் அவரை காதலிப்பதாக கூறி ஏற்றிவிடும் கேரக்டரில் லூட்டி அடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் வரும் வெள்ளக்கிழமை வெளியாக இருக்கும் வாத்தி படத்தில் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தனராக இயக்குநர் பாரதிராஜா பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது:
வயதில் சிறயவர்களாக இல்லையென்றால் தனுஷ், ஜிவி பிரகாஷ் காலில் விழுவேன். ஜிவி பிரகாஷ் கடவுளின் குழந்தை.
தனுஷ் சிறந்த நடிகன் மட்டுமில்லாமல், நல்ல மனிதனாகவும் உள்ளார்.
சம்யுக்தாவை பார்க்கும்போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது. கடலோர கவிதைகள் படத்தில் நான் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும்போது காலம் தப்பி பிறந்து விட்டேனா என தோன்றுகிறது. சம்யுக்தாவை இப்போது நான் காதலிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மலையாள நடிகையான சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில் படங்களில் நடித்தார். தெலுங்கில் பீமல நாயக் என்ற படத்தில் நடித்த அவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் வாத்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார்.
பிரேமம் மலர் டீச்சரை அடுத்து தற்போது வாத்தி படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கும் சம்யுக்தா, இப்போதே பலரது க்ரஷ்ஷாக மாறி வருகிறார். அந்த லிஸ்டில் தானும் இருப்பதை 80 வயதாகும் பாரதிராஜா வெளிப்படுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்