நான் அழகுக்காக அதை செய்தேனா.. இதுதான் காரணம்.. வேறொன்றும் இல்லை.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா
உண்மையில்லை நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது அதனால் என் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும், தடித்து இருப்பது போலவும் காட்டுகின்றன. அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்

லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் திரை உலகில் வலம் வரும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றிகரமாக நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். மேலும் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியானது. இப்படி தனது துறையில் பிசியாக வலம் வந்தாலும் நயன்தாரா அடிக்கடி தனது மகன்கள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அப்போதும் தன்னை ஆக்டீவாக வைத்துள்ள நயன்தாரா தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வைரலாக தொடங்கியது.
நயன்தாரா சினிமாவில் அறிமுகமான போது இருந்த முக அமைப்பிற்கும் இப்போது உள்ள தோற்றத்திற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் மூக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கலாம். அதேபோல் ஆரம்பத்தில் இருந்தே அவரது கன்னம் பெரிதாக இருந்தது. ஆனால் தற்போது கன்னங்கள் ஒட்டி உள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை அவர் கரைத்து இருக்கலாம். உதட்டில் லிப் ஃபில்லர்களை பயன்படுத்தி இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது.
சமீபத்தில் அவர் அறித்த பேட்டி ஒன்றில், “புருவத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான் அதை அழகுப்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்வேன் ஏனென்றால் அதுதான் எனக்கு உண்மையான கேம்ஸ் அடிக்கடி அதில் வித்தியாசம் தெரிவதால் என் முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறேன் என நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையில்லை நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை. டயட் காரணமாக உடல் எடையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது அதனால் என் கன்னங்கள் ஒட்டி இருப்பது போலவும், தடித்து இருப்பது போலவும் காட்டுகின்றன. அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்