படு கவர்ச்சி உடை அணியும் நடிகை உர்ஃபி – எதுக்கு மன்னிப்பு கேட்டார்?
Bollywood Actress : இனி மற்றவர்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் உடைகளை அணிய மாட்டேன் என்று படுகவர்ச்சியாக உடை அணியும் பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத் கூறியுள்ளார்.
இந்தி நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். உர்ஃபி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின. இவர் மாடல் என்பதால் வித்யாசமான உடைகளை அணிந்து அவ்வப்போது ஃபோட்டோ சூட்கள் நடத்தி, அந்தப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வைரலாக்குவார். இவர் டெடி மெடி ஃபேமில் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்.
ட்ரெண்டிங் செய்திகள்
லக்னோவில் பிறந்த இவர் அமெட்டி பல்கலைக்கழகத்தில் படித்தார். சோனி டிவியில் பாடகியாக தனது திரை பயணத்தை துவக்கினார். பின்னர் பிக்பாஸ் மூலம் பிரபலமானார். இவர் தற்போது மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் பாராஸ் கல்னாவாத் என்பவருடன் உறவில் இருந்தார். பின்னர் பிரிந்துவிட்டார். இவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி லைக்குகளை அள்ளுவார். இவரது கவர்ச்சி படங்களை சமூகம் வெறுத்தாலும் இவருக்கென்று ஒரு பெரிய பேன் பட்டாளமே உள்ளது.
இவர் அறைகுறை ஆடைகளுடன் வெளியிலே சென்றாலே பாப்பரசிகள் துரத்துவார்கள். இவரும் நிறைய புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். உர்ஃபி ஆடை அணிந்திருக்கிறாரா என்ற சந்தேகம் வரும்வகையில் அவ்வளவு குறைவான மற்றும் கவர்ச்சியான ஆடைகளையே இவர் தேர்ந்தெடுத்து அணிவது வழக்கம்.
உர்ஃபி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிளுகிளு படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் உர்ஃபி ஜாவேத் வெளியிட்டுள்ள பதிவில், "நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். அவரது முடிவை பலர் பாராட்டி உள்ளனர். இன்னும் சிலர் உர்பி ஜாவேத் சொன்னதை நம்பாமல் ஏப்ரல் 1ம் தேதி என்பதால் முட்டாளாக்க பொய் சொல்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.