தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bharathi Kannamma: என்னது பாரதி கண்ணம்மா Part-2 ஆ... மறுபடியும் முதல்ல இருந்தா?

Bharathi Kannamma: என்னது பாரதி கண்ணம்மா Part-2 ஆ... மறுபடியும் முதல்ல இருந்தா?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 01, 2023 01:39 PM IST

பாரதி கண்ணம்மா பார்ட் 2 விரைவில் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா கோப்புபடம்
பாரதி கண்ணம்மா கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 4 ஆண்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர் பாரதி கண்ணம்மா.

இதில் நடிகர் அருண் பிரசாத் நாயகனாகவும் ரோஷினி ஹரிப்பிரியன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்தனர். ஃபரினா ஆசாத் வெண்பா என்ற பெயரில் வில்லியாக நடித்த இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரம் அத்தியாயங்கள் கடந்து விரைவில் முடிய உள்ள விஜய் டிவி சேனில் பிரைம் டைம் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரின் தலைப்பே கவித்துவமாகவும் எளிதில் மக்கள் மனதில் பதியும் வகையிலும் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த தொடருமே சில சமயங்களில் போரடித்தாலும் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கும் அதுபோல் தான் பாரதி கண்ணம்மா ஒரு கட்டத்தில் தன் ரசிகர்களை சலிப்படைய வைத்தது. அப்போது தான் பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்டதால் கோபமடைந்த கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி தெருவில் நடக்கத் தொடங்கினார். அதில் கண்ணம்மா நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார். இதனால் கடுப்படைந்த பலரும் கண்ணம்மாவை தனது சமூக வலைத்தள பதிவுகளில் கலாய்க்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களின் கண்டென்டாக மாறினார் கண்ணம்மா.

இதையடுத்து ஒரு வழியாக தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியது. அப்போது கணவனை பிரிந்த கண்ணாமாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. பிரசவத்தை பாரதியும் அவரது தாய் சவுந்தர்யாவும் அடுத்தடுத்து பார்த்தனர். அப்போது சவுந்தர்யா ஒரு குழந்தையை விட்டுக்கு எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். அது தத்தெடுத்த குழந்தை என்றும் அதற்கு பாரதிதான் அப்பா என்றும் கூறினார். பின்னர் இரண்டு குழந்தைகளும் தனி தனியாக வளர்ந்து வந்தனர். கண்ணம்மா கஷ்டப்பட்டு தன் குழந்தையை வளர்த்தார். ஆனால் பாரதியிடம் வளர்ந்த குழந்தை நல்ல வசதிகளோடு வளர்ந்தது. அப்போது பாரதியிடம் வளர்ந்த குழந்தை அம்மாவின் பாசத்திற்காகவும், கண்ணம்மாவிடம் வளர்ந்த குளந்தை அம்மாவின் பாசத்திற்காகவும் ஏங்க ஆரம்பித்தனர். இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் பாரதியிடம் வளர்ந்த குழந்தை கண்ணாம்மாவின் உடையது தான் என்று தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது டிஎன்ஏ டெஸ்ட் முடிவையடுத்து பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். ஆனால் கண்ணம்மா மீண்டும் கோபம் அடைந்து கிராமத்திற்கு சென்றார். இப்போது பாரதியை கண்ணம்மா ஏற்று கொண்டாலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிசன் போட்டுள்ளார். அதனால் இப்போது பாரதி கண்ணம்மாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் கல்யாணத்தோடு சீரியலும் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் பாரதி கண்ணம்மா குழுவினர் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் பாரதி கண்ணம்மா முடிவடைந்த உடனே உடனடியாக ஓரிரு நாளில் பாரதி கண்ணம்மா part 2 வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்