Bayilvan: முத்தக்காட்சியில் ரஜினி நடிக்காதது ஏன் ? - பயில்வான் சொன்ன ஷாக் தகவல்
பயில்வான், சமீபத்தில் ரஜினிகாந்த் பற்றிய ரகசியம் ஒன்றை கூறி உள்ளார்.
திரைப்பட பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பல படங்களில் நடித்துள்ளார். அவர் தனது யூடியூப் சேனலின் மூலம், திரைப்பட நட்சத்திரங்களைப் பற்றி பேசி வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனிடையே பயில்வான், சமீபத்தில் ரஜினிகாந்த் பற்றிய ரகசியம் ஒன்றை பிரபல யூ-டியூப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் 170 படம் நடித்து இருக்கிறார். ஆனால் ஒரு படத்தில் கூட அவர் முத்தக்காட்சியில் நடிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் மக்கள் மத்தியில் தான் நல்ல நடிகர் என பெயர் எடுக்க வேண்டும் என்றால், அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க கூடாது என்று அவருக்கு தெரியும்.
முதல் முதலில் தன்னை வைத்து படம் தயாரித்த 14 தயாரிப்பாளருக்கு படம் செய்து கொடுத்து முழு லாபத்தையும் தந்து இருக்கிறார். அந்த மனித பன்பு மிக்கவர். நானும் அவருடன் மூன்று படங்கள் மேல் நடித்து இருக்கிறேன்.
தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைப்பார். பிரபு, கார்த்தி மார்க்கெட் இழந்த போது, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தார். எந்தவிதமான கிசுகிசு வந்தாலும் அதை எல்லாம் தாண்டி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார் " என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்