தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Azeem: பிக்பாஸ் வென்ற பணத்தில் என்ன செய்ய போகிறேன்? - அசீம்மின் அதிரடி அறிவிப்பு

Azeem: பிக்பாஸ் வென்ற பணத்தில் என்ன செய்ய போகிறேன்? - அசீம்மின் அதிரடி அறிவிப்பு

Aarthi V HT Tamil
Jan 25, 2023 12:02 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்ற அசீம் தான் வென்ற 50 லட்சம் ரூபாயில், 25 லட்சம் ரூபாய்யை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்துவதாக உறுதியளித்து உள்ளார்.

அசீம்
அசீம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கொடுத்த ஆதரவுக்கு அசீம் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டு உள்ளார்.

அதில், “எம் மக்களுக்கு வணக்கம். பல்வேறு தளங்களில் உங்கள் ஆதரவு வருவதைக் கண்டு நான் திகைத்து நிற்கின்றேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மக்களே. எம் மக்களை உயிர் உள்ளவரை நான் மறவேன். நான் பெற்ற அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

நான் உறுதியளித்தபடி, எனது வெற்றித் தொகையில் 25,00,000 லட்சம் ரூபாய்யை கோவிட்-19 காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக கொடுக்கிறேன்.

இது எனது ஆரம்பம், நீங்கள் எனக்கு அளித்த அன்பை சமூகத்திற்கு திருப்பித் தருகிறேன். என்றென்றும் நான் உங்கள் அனைவருக்கும் பேரானந்தமாக இருப்பேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து வீடியோவில், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் இனிய வணக்கம்.பிக் பாஸ் சீசன் 6 முடிந்துவிட்டது. முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்னால் இரண்டு நாட்கள் போனை எடுத்துப் பார்க்க முடியவில்லை. 106 நாட்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்துவிட்டு வெளியே வந்து மக்களைப் பார்க்கும் போது அதிலிருந்து வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது.

நான் என்னுடைய தமிழ் பெருங்குடி சொந்தங்களுக்கும், என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் மக்களுக்கும் நன்றிகள். பிக் பாஸ் சீசன் 6 கப் அடித்து விட்டோம். 106 நாட்கள் விளையாடியது நான் தான். ஆனால் விளையாடும் போது பல எழுச்சிகளையும், பேச்சுகளையும், சங்கடங்களையும் சந்தித்து இருக்கிறேன்.

என்னுடைய தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நம்மை நாம் நம்பவில்லை என்றால் யார் நம்புவா?. என் நம்பிக்கையை நீங்கள் மெய்ப்படுத்தி விட்டீர்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்த 14 வாரங்களும் நான் நாமினேட் செய்யப்பட்டேன்.

நான் வெளியில் வந்து பார்க்கும் போது ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் எனக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து இருந்தீர்கள். அதைப் பார்த்து நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று விட்டேன். உங்கள் பாசத்திற்கு மிகவும் நன்றி.

நான் அன்று சொன்னது தான் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோர்களின் பள்ளி குழந்தைகளுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்ற 50 லட்சம் ரூபாயில், 25 லட்சம் ரூபாய்யை நன்கொடையாக வழங்குகிறேன். இதற்காக ஓபன் பேங்க் கணக்கு ஓபன் செய்கிறேன். அதில் யார் வேண்டுமானாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் அதை நாங்கள் ஆய்வு செய்துவிட்டு, அவர்களுக்கு உதவி செய்வோம்.

இதற்காக சமூக வலைத்தளங்களில் ஒரு கணக்கு தொடங்கி அவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டு உதவி செய்தவர்களின் தகவல் போடப்படும். எனக்கு கொடுத்த 50 லட்சத்தில் நேர்பாதி 25 லட்சம் ரூபாய் பணத்தை, என்னை இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வைத்த மக்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.

என்னதான் சொல்லும், செயலும் ஒன்று ஆனாலும் உலகின் தலைசிறந்த சொல் செயல். நான் என்னுடைய செயலை, செயல் வடிவத்தில் காட்டுகிறேன்” என கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்