தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anna : பரணிக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்.. காதல் குறித்து சொன்ன ஷண்முகம்!

Anna : பரணிக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்.. காதல் குறித்து சொன்ன ஷண்முகம்!

Divya Sekar HT Tamil
Jul 04, 2023 01:01 PM IST

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

அண்ணா சீரியல்
அண்ணா சீரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மெஹந்தி போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இன்னிசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்திருக்க முதலில் வெங்கடேஷ் என்னை விட்டு போகாதே என்ற பாடலை ரதனாவை பார்த்தபடியே பாட கனி ஷண்முகம் வெங்கடேஷை பார்த்திராத படி மறைத்து கொண்டே இருக்கிறாள். இதனை தொடர்ந்து கனி பாட்டு பாட போக ஷண்முகம் உனக்கு பாட வரத்து நீ எதுக்கு போற என்று கேட்க மேடைக்கு போன கனி பயங்கரமாக பாடி கைதட்டல்களை வாங்குகிறாள். அதன் பிறகு கார்த்திக் ஒரு பாட்டு பாடி முடிக்க எல்லாரும் சண்முகத்தைபாட சொல்கின்றனர்.

ஆனால் ஷண்முகம் முடியாது என்று சொல்லி கொண்டிருக்க பரணி எனக்காக பாடு என்று சொல்ல மேடைக்கு போன ஷண்முகம் வழி நெடுக காட்டுமல்லி என்ற பாடலை பாடுகிறான், பரணியும் அவன் பாடுவதை கேட்டு கூட சேர்ந்து பாடுகிறாள். அதன் பிறகு சண்முகத்தை வழி மறித்து நீ யாரை காதலிக்கிற என்று கேட்க அவன் யாரும் இல்லை என்று சமாளிக்கிறான்.

ஆனால் பரணி விடாமல் கேள்வி கேட்க ஒரு பெண்ணை காதலிக்கிறேன், ஆனால் அது யாருனு இப்போ சொல்ல மாட்டேன் என்று சொல்கிறான். பிறகு பரணி நீ முதலில் அந்த பொண்ணுகிட்ட உன் காதலை சொல்லு, அப்பறம் அவ கிட்ட ஷண்முகம் மாதிரி ஒரு பையன் கிடைக்க மாட்டான்னு சொல்லணும்னு சொல்லி கிளம்ப வெட்டுக்கிளி அது நீதான்னு சொல்லி இருக்கலாம்ல அண்ணா என்று கேட்க அவ என்னை மாதிரி பையன் எல்லாம் அவளை லவ் பண்ண மாட்டான்னு நம்பிட்டு இருக்க என்று வலியோடு சொல்கிறான்.

அடுத்ததாக வெங்கடேஷ் ரத்னாவை வழிமறித்து நாளைக்கு மலை கோவிலுக்கு வந்துடு, இல்லைனா நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறான். அடுத்து பரணி மொட்டை மாடியில் தனியாக உட்கார்ந்திருக்க அவள் பக்கத்தில் ஒரு பாம்பு கொத்த வர இதை பார்த்த கனி சத்தம் போட எல்லாரும் அங்கு வந்து விடுகின்றனர்.

கார்த்திக் செய்வதறியாது தவிக்க ஷண்முகம் ஓடி வந்து பரணியை காப்பாற்ற அவள் ஷண்முகத்தை கட்டி கொள்ள கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான், பிறகு அவன் ஷண்முகம் உன்னை காதலிக்கிறான் என்று சொல்ல பரணி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்