அல்லு அர்ஜுன் மீது எந்த தப்பும் இல்லை.. வழக்கை வாபஸ் பெறுவேன்! உயிரிழந்த ரேவதி கணவர் டுவிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அல்லு அர்ஜுன் மீது எந்த தப்பும் இல்லை.. வழக்கை வாபஸ் பெறுவேன்! உயிரிழந்த ரேவதி கணவர் டுவிஸ்ட்

அல்லு அர்ஜுன் மீது எந்த தப்பும் இல்லை.. வழக்கை வாபஸ் பெறுவேன்! உயிரிழந்த ரேவதி கணவர் டுவிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Dec 13, 2024 08:28 PM IST

Allu Arjun: அல்லு அர்ஜுன் மீதான வழக்கில் திடீர் திருப்புமுனையாக உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணனி கணவர் தேவைப்பட்டால் வழக்கை வாபஸ் பெறுவேன் என தெரிவித்துள்ளது. அத்துடன் அல்லு அர்ஜுன் மீது எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுன் மீது எந்த தப்பும் இல்லை.. வழக்கை வாபஸ் பெறுவேன்! உயிரிழந்த ரேவதி கணவர் டுவிஸ்ட்
அல்லு அர்ஜுன் மீது எந்த தப்பும் இல்லை.. வழக்கை வாபஸ் பெறுவேன்! உயிரிழந்த ரேவதி கணவர் டுவிஸ்ட் (AFP)

இந்த வழக்கில் ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை வாபஸ் பெற தயார்

இதையடுத்து உயிரிழந்த ரேவதியின் கணவர், அல்லு அர்ஜுன் கைது குறித்து கூறியதாவது, "எங்களது மகன் விரும்பியதால் படம் பார்க்க சென்றோம். அல்லு அர்ஜுன் அங்கு வந்ததில் தவறில்லை. எதுவாக இருந்தாலும் வழக்கை வாபஸ் பெற தயாராக உள்ளேன். கைது தொடர்பாக போலீசார் தரப்பில் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

போனில் செய்தி பார்த்து தான் அல்லு அர்ஜுன் கைதாகி இருப்பது தெரிந்தது. அப்போது நான் மருத்துவமனையில் இருந்தேன். அல்லு அர்ஜுன் கைதால் எதுவும் மாறப்போவதில்லை" என்றார்.

நீதிமன்ற காவல், இடைக்கால ஜாமின்

இந்த வழக்கில் திரையரங்க ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள்கள் காவல் விதித்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் சஞ்சல்குடா சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

அல்லு அர்ஜுன் கைது விவகாரம் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, திடீர் திருப்புமுனையாக வழக்கை வாபஸ் செய்யவும் தயார் என உயிரிழந்த ரேவதியின் கணவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவியும் ஆதரவு

இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் ஆதரவாக கருத்துகளும், பிரச்சாரங்களும் குவிய தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கடிதம் ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள். அதில், "இந்த ப்ரீமியர் ஷோவுக்கு போலீசார் தரப்பில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அல்லு அர்ஜுன் மீது எந்த தவறும் இல்லை" என அதில் கூறப்பட்டுள்ளது.

கைதுக்கு பின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாகேந்திர பாபு குடும்பத்தினர் அல்லு அர்ஜுன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட திருப்புமுனை ஏற்படுத்திய நிலையில், பின்னர் சில நிமிடங்களிலேயே அவருக்கு இடைக்கால ஜாமினும் வழங்கப்பட்டது.

கல்லீரலை தானம் கொடுத்தார்

இந்த விபத்தில் மறைந்த தனது மனைவி ரேவதியை பற்றி கணவர் பாஸ்கர் பேசியபோது, 2023இல் தனக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ததை நினைவு கூர்ந்தார். இதுகுறித்து அவர் கண்ணீருடன், "அவள் எனக்கு உயிர் கொடுத்தாள், இப்போது அவள் போய்விட்டாள்." கட்டுக்கடங்காத கூட்டத்தில் எங்கள் மகனைப் பாதுகாக்க முயன்றபோது ரேவதி படுகாயமடைந்தார். ஸ்ரீதேஜ் கடுமையான ஹைபோக்ஸியா, நுரையீரல் காயத்தால் பாதிக்கப்பட்டார்" என்றார்

அந்த சம்பவம் பற்றி நினைவு கூர்ந்த பாஸ்கர், "சான்வியை தியேட்டருக்குப் பக்கத்தில் உள்ள என் மாமியார் வீட்டில் விட முடிவு செய்தேன். நான் திரும்பி வருவதற்குள், நான் அவர்களை விட்டுச் சென்ற இடத்தில் என் மனைவியும் மகனும் இல்லை. 

நான் கூப்பிட்டபோது, ​​ரேவதி தியேட்டருக்குள் இருக்கிறேன் என்றார். அதுதான் கடைசியாக அவள் குரலை கேட்டது. சிக்காட்பல்லி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரோந்து காரில் ஸ்ரீதேஜ் அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வீடியோவை யாரோ ஒருவர் எனக்குக் காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. அவரை கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் அசையாமல் இருந்தார்.

அதிகாலை 2.30 மணி வரை ரேவதி பற்றிய எந்த அறிவிப்பும் எனக்கு வரவில்லை. அப்போதுதான் சில போலீஸ்காரர்கள் எனக்கு செய்தியை வெளியிட்டார்கள், என் இதயம் நொறுங்கி போனது" என்றார்