அடுத்த அட்டாக் சிஎம் மீது..பாய்ந்தது வழக்கு - பம்மியவாறு மன்னிப்பு கேட்ட நடிகை ஸ்ரீரெட்டி
ஆந்திர முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து கூறியதற்காக வழக்கு பாய்ந்த நிலையில், தற்போது பம்மியவாறு மன்னிப்பு கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி விடியோ பகிர்ந்துள்ளார்.

அடுத்த அட்டாக் சிஎம் மீது..பாய்ந்தது வழக்கு - பம்மியவாறு மன்னிப்பு கேட்ட நடிகை ஸ்ரீரெட்டி
தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி, சர்ச்சை கிளப்புவதில் பெயர் பெற்றவராக இருந்துள்ளார். பிரபல சினிமா நட்சத்திரங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து பரபரப்பை கிளப்பிய இவர், அதற்கான அரைநிர்வாண போராட்டமும் நடத்தி ஷாக் கொடுத்தார்.
இவரது குற்றச்சாட்டில் கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் அடங்கியுள்ளார். நடிகர், விஷால், ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்களை கூறி அலறவிட்டார்.
இதைத்தொடர்ந்து தற்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு மீது அவதூறு பரப்பி மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.