Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம்... சாரி சொல்லி சிரித்த ரஜினி காந்த்... என்ன நடந்தது?
Tirupathi Laddu: திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

திருப்பதி லட்டு பிரசாதம் தயார் செய்யப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருக்கலாம் என்று வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருள் ஆன நிலையில் பலரும் தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில், தேசிய அளவில் பேசுபொருளான இந்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஸாரி. நோ கமெண்ட் என பதிலளித்து இந்த விவகாரம் குறித்து பேசாமல் கடந்து சென்றுள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்கு எச்சம்!
உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானிடம் நேரில் சென்று சரணடைந்து தரிசனம் செய்தால், தங்கள் வாழ்வின் துயர் நீங்கும் என நினைத்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்துவரும் லட்டில் விலங்குகளின் எச்சம் கலந்த லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்ததாக ஆந்திர முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.