Karthi Apology: “லட்டு வேண்டாம் என பேச்சு..”கொதித்த பவன் கல்யாண் - பணிந்த கார்த்தி மன்னிப்பு
Karthi Apology: லட்டு வேண்டாம் எனவும், அது உணர்ச்சிகரமான டாப்பிக் ஆக இருப்பதாக கார்த்தி பேசியதற்கு, தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் மற்றும் துணை முதலமைச்சருமான நடிகர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இதற்கு கார்த்தி தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

Karthi Apology: “லட்டு வேண்டாம் என பேச்சு..”கொதித்த பவன் கல்யாண் - பனித்த கார்த்தி மன்னிப்பு
திருப்பதி லட்டு பிரசாதத்தை தயார் செய்யப்படும் நெய்யில் விலங்குகளில் கொழுப்பு கலந்திருக்கலாம் என்று வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருள் ஆன நிலையில் பலரும் தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்துக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தை சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர அராசங்கம் நியமித்துள்ளது.
இந்த விவகாரத்தில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்.