Rajinikanth: ‘எப்படா விழுவான்னு காத்துக்கிட்டு இருப்பாங்க.. நம்மள மிதிக்கணும்னு நினைக்கிறவன நாம’ -வெறியான ரஜினிகாந்த்!
Rajinikanth: “மும்பை திரைதுறையுலமே மிகப்பெரிய கொண்டாட்டத்துல இருந்துச்சு. ரொம்ப வேகமா உயர பறந்தா, எப்படா விழுவான்னு காத்துகிட்டு இருப்பாங்க..” - மேடையில் வெறியான ரஜினிகாந்த்!

Rajinikanth: ‘எப்படா விழுவான்னு காத்துக்கிட்டு இருப்பாங்க.. நம்மள மிதிக்கணும்னு நினைக்கிறவன நாம’ -வெறியான ரஜினிகாந்த்!
‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய நண்பரான அமிதாப்பச்சன் குறித்து பேசினார்.
அமிதாப்தான் அத செஞ்சார்
அவர் பேசியதாவது, “ஹிந்தியில ‘அந்தா கனூன்’ படத்துல நான் நடிக்கிறதுக்கு காரணமே அமிதாப்பச்சன்தான்.அப்ப ஹிந்தில கமலோட ‘ஏக் துஜே கேலியே’ படம் நல்லா போயிட்டு இருந்துச்சு. தெலுங்குல ‘அந்தா கனூன்’ படம் ஹிட் ஆனதுனால, அந்த படத்தை ஹிந்திலையும் எடுக்கணும்னு முடிவு பண்ணாங்க. அப்ப அந்த படத்துல வேறொரு நடிகரை நடிக்க வைப்பதற்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.