Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம்..என்னப்பா தம் கட்டி சவுண்ட் விடலயா? கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜுக்கு ட்ரோல்
Bluesattai Maran: திருப்பதி லட்டு விஷயம் தொடர்பாக கவுண்டமணி ஸ்டைலில் சத்யராஜை ட்ரோல் செய்திருக்கும் பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன், அவர் அமைதியாக இருப்பதற்கான பின்னணி காரணம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூசட்டை மாறன் சினிமாக்களை விமர்சனம் செய்வதையும் கடந்து ஹீரோக்களையும் ட்ரோல் செய்வதையும், வம்புக்கு இழுப்பதையும் முக்கிய வேலையாக செய்து வருகிறார். எந்த நடிகரையும் குறி வைக்காமல் அனைத்து ஹீரோக்களையும் அவர்கள் கூறிய கருத்து அல்லது லேட்டஸ்ட் பேச்சுக்களால் வம்பிழுத்து சகட்டு மேனிக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் மீம்ஸ்களால் கலாய்த்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது லேட்டஸ்டாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், திரைப்படங்களில் தனது நக்கல் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான சத்யராஜ்ஜை சீண்டியுள்ளார்.
லட்டு பத்தி கருத்து சொல்லலையா?
கடவுள் மறுப்பு, பொரியரிசம் பற்றி மேடைக்கு மேடை தனது பேச்சிலும், பல்வேறு பேட்டிகளிலும் பேசி வருபவராக நடிகர் சத்யராஜ் இருந்துள்ளார். இவரது சமீபத்திய ரிலீசான தோழர் சேகுவேரா என்ற படத்தில் கூட பெரியரிசம் கருத்துகள், இடஓதுக்கீடு, மாட்டுக்கறி சாப்பிடுவது போன்ற போல்டான விஷயங்களை பற்றி காட்சிகள் அனல் தெறிக்கும் வசனங்களை பேசியிருந்தார் சத்யராஜ்.