Aamir Khan: 'எமோஷனலா ரெடியாகல, தோணும்போது சொல்றேன் ' - ஆமிர் கான்
நடிகர் ஆமிர் கான் மீண்டும் படங்களில் நடிக்க வருவது குறித்து பேசினார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் கலக்கி வந்த ஆமீர் கான். அவர் நடித்த 'லால் சிங் சத்தா' பெரும் தோல்வியடைந்தது. ஹாலிவுட் படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை இந்தியில் ரீமேக் செய்த நிலையில் அமீர் கான் தோல்வியடைந்தார் .
ட்ரெண்டிங் செய்திகள்
அதன் பிறகு ஆமீர் கானுக்கு ஓய்வு தேவை என்று தோன்றியது. அதனால் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். இருப்பினும், திரையுலகுடனான அவரது தொடர்பு தொடர்கிறது. சமீபத்தில் அவர் மீண்டும் நடிக்க வருவது குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், “எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எந்த படத்தில் நடிப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. நான் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும். இப்போதைக்கு இதுதான் வழி என்று தோன்றுகிறது. எமோஷனலாக தயாரானதும் படங்களில் நடிக்க வருவேன்” என்றார்.
2021 ஆம் ஆண்டு கிரண் ராவுடன் விவாகரத்து பெற்றார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அமீர்கான் மீது பல கிசுகிசுக்கள் வந்தன. இவர் நடிகை பாத்திமா சாஹா ஷேக்குடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கிடையேயான உறவு பற்றி அதிகமாக தெரியவில்லை.
அமீர்கான் ஏற்கனவே இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு விவாகரத்து செய்துவிட்டார். கிரண் ராவுக்கு முன்பே ரீனா தத்தாவை அமீர் திருமணம் செய்து கொண்டார். அவரையும் விவாகரத்து செய்தார். பிரிந்த பிறகும்.. எனது முன்னாள் மனைவிகளுடன் நல்லுறவு இருக்கும் என்று அமீர்கான் முன்பு கூறியிருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்