தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Needhikku Thalaivanangu: மக்களுக்காக மாற்றப்பட்ட கதை..கிளைமாக்ஸில் வியப்பை ஏற்படுத்திய எம்ஜிஆர்.. அதிரடி வெற்றி

Needhikku Thalaivanangu: மக்களுக்காக மாற்றப்பட்ட கதை..கிளைமாக்ஸில் வியப்பை ஏற்படுத்திய எம்ஜிஆர்.. அதிரடி வெற்றி

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 05:00 AM IST

Needhikku Thalaivanangu: 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் நீதிக்கு தலைவணங்கு. தமிழில் எம்ஜிஆரை வைத்து பா. நீலகண்டன் இயக்கினார். அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அதேசமயம் வியப்பையும் ஏற்படுத்தியது.

நீதிக்கு தலைவணங்கு
நீதிக்கு தலைவணங்கு

ட்ரெண்டிங் செய்திகள்

த‌ற்கொலை முய‌ற்சியில் ஈடுப‌ட்ட‌ த‌ன் வீட்டு டிரைவ‌ரின் த‌ங்கை ரோஜார‌ம‌ணி (த‌ன‌க்கு ப‌திலாக‌ சிறை சென்ற‌ கோபால‌கிருஷ்ண‌னின் த‌ங்கை)யை காப்பாற்றி த‌ன் பாதுகாப்பில் வைத்திருப்பார் எம்ஜிஆர். அவ‌ச‌ர‌த்திற்கு லாட்ஜ் ஒன்றில் ரூம் புக் செய்து த‌ங்க‌ வைத்திருப்பார். தான் வெளியே சென்றுவிட்டு வ‌ருவ‌தாக‌ செல்வார். சிறிது நேர‌த்தில் அந்த‌ ரூமில் நுழைந்த‌ ராம‌தாஸ், ரோஜார‌ம‌ணியிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முய‌ற்சிப்பார். அதே நேர‌ம் எம்ஜிஆர் உள்ளே வ‌ந்து ராம‌தாஸை புர‌ட்டி எடுத்து துர‌த்திவிடுவார்.

ரோஜார‌ம‌ணி உட‌னே தலைவ‌ரிட‌ம் அண்ணா, அவ‌னை போலீஸில் பிடித்து கொடுக்காம‌ல் விர‌ட்டி விட்டுவிட்டீர்க‌ளே? என்று ஆத‌ங்க‌ப்ப‌டுவார். அத‌ற்கு த‌லைவ‌ர், த‌ங்க‌ச்சி..அவ‌னை பிடித்து போலீஸில் ஒப்ப‌டைப்ப‌து பெரிய‌ காரிய‌ம‌ல்ல‌. ஆனால், உட‌னே போலீசில் நீ யார்? உன‌க்கும் என‌க்கும் என்ன‌ உற‌வு? என்று கேட்பார்க‌ள்..என்பார். அத‌ற்கு ரோஜா ர‌ம‌ணி தான் த‌ற்கொலை செய்துகொள்ள முய‌ற்சித்த‌போது காப்பாற்றிய‌வ‌ர் இந்த‌ அண்ண‌ன் என்பேன்..என்று சொல்வார். உட‌னே த‌லைவ‌ர், த‌ற்கொலை முய‌ற்சிக்கு த‌னியாக‌ உன்மேல் ஒரு வ‌ழ‌க்கு விழும்.

கோர்ட்டில் தேவையில்லாத‌ கேள்விக‌ள் எல்லாம் கேட்பார்க‌ள் என்பார். உட‌னே ரோஜார‌ம‌ணி அண்ணா! அப்ப‌டின்னா உண்மையே சொல்ல‌க்கூடாதா என்று கேட்பார்..அத‌ற்கு த‌லைவ‌ர் ஐய‌ய்யோ! அதுக்காக‌ நீ பொய் பேச‌ க‌த்துக்காத‌ம்மா! நீதிம‌ன்ற‌த்தில் ந‌ம்த‌ர‌ப்பு நியாய‌த்தை நிரூபிக்க‌ வ‌லுவான‌ ஆதார‌ங்க‌ள் வேண்டும் என்றுதான் கூறுகிறேன் என்பார்.

அண்ணே! இந்த லாட்ஜில் இனி ஒருநிமிட‌ம் கூட‌ இந்த‌ லாட்ஜில் இருக்‌க‌வேண்டாம்ணே என்பார். அத‌ற்கு த‌லைவ‌ர் உன்ன‌ யார் இருக்க‌ சொன்ன‌து..வாட‌கைக்கு வீடு பார்த்து அட்வான்ஸ் கூட‌ கொடுத்தாச்சு. உட‌னே கிள‌ம்ப‌லாம் என்று சொல்வார். ம‌ன‌தில் நின்ற‌ காட்சிக‌ளில் இதுவும் ஒன்று.

(புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முகநூல் பக்கத்தில் அவரது ரசிகர் பகிர்ந்து அனுபவம் இது).

காட்சிகளில் கூட, ரசிகர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக தேர்வு செய்து நடித்தவர் எம்.ஜி.ஆர்., என்பதற்கு இந்த காட்சி சான்று. படமும் தான்!

ரஷ்ய எழுத்தாளரான தாஸ்தாயெவ்ஸ்கி அவர்களால் எழுதப்பட்ட நாவலான குற்றமும் தண்டனையும் மிகப்பெரிய புகழ்பெற்றதாகும். உலகம் முழுவதும் இந்த நாவலுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது. இந்த நாவலை வைத்து உலகங்களும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த நாவலின் மதிப்பில் இருந்து தெலுங்கு இயக்குனரான விஸ்வநாத் 1973 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் எடுத்தார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் நீதிக்கு தலைவணங்கு.

தமிழில் எம்ஜிஆரை வைத்து பா. நீலகண்டன் இயக்கினார். அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அதேசமயம் வியப்பையும் ஏற்படுத்தியது.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்