தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Minister Kn Nehru: ’நான் முத்தரையர்களுக்கு எதிரியா?’ செண்டிமண்டாக பேசிய அமைச்சர் கே.என்.நேரு!

Minister KN Nehru: ’நான் முத்தரையர்களுக்கு எதிரியா?’ செண்டிமண்டாக பேசிய அமைச்சர் கே.என்.நேரு!

Kathiravan V HT Tamil
Apr 08, 2024 02:53 PM IST

”திருச்சி தொகுதி திமுகவுக்கு கிடைத்து இருந்தால் நிச்சயமாக அது நடந்து இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் மாறிவிட்டது”

தேர்தல் பரப்புரையில் அமைச்சர் கே.என்.நேரு
தேர்தல் பரப்புரையில் அமைச்சர் கே.என்.நேரு

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. 

திமுகவில் முத்தரையர், கள்ளர் சமூகத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை அரசியலில் வளரவிடாமல் கே.என்.நேரு அரசியல் செய்ததாக திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் ராஜசேகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குற்றம் சாட்டி இருந்தார். 15 முத்தரையர் இன தலைவர்கள் திமுகவில் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பெரம்பலூர் தொகுதியில் நேரு பரப்புரை

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், தனது மகன் அருண் நேருவை ஆதரித்து குளித்தலை பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், ”யாரும் தவறாக எடுத்துக்காதீர்கள் திருச்சி தொகுதி திமுகவுக்கு கிடைத்து இருந்தால் நிச்சயமாக அது நடந்து இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் மாறிவிட்டது. இல்லை என்றால் நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எல்லோரோடும் இருந்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என எண்ணுகிறவர்கள் நாங்கள். 

இது மிகப்பெரிய சமுதாயம், நாங்கள் உங்களை ஒட்டிதான் இருப்போமே தவிர; உங்களை எதிர்த்து இருக்கமாட்டோம். வாய்ப்பு கிடைக்கும் போது மிகப்பெரிய இடத்திற்கு இந்த சமுதாயம் வரும், அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். 

இந்த தேர்தலை பொறுத்தவரை மிக முக்கியமான தேர்தல், செந்தில் பாலாஜி அவர்கள் வெளியில் இல்லாத காரணத்தால் அந்த வேலையை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன். இன்றைக்கும் அவர்தான் எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. கரூரில், செந்தில் பாலாஜி என்ன கேட்டாலும் தந்துள்ளார் முதலமைச்சர். 

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், நாம் நினைக்கும் பணிகள் நிச்சயமாக நிறைவேறும். மோடி அவர்கள் சமூகநீதி கொள்கைக்கு நேர் எதிரானவர், திமுகவின் கொள்கையை போலவே காங்கிரஸும் தேர்தல் அறிக்கையைகளை தந்து உள்ளனர். 

மோடியை தோற்கடிக்க முடியாது 400 இடம் வருவார் என்று சொன்னார்கள் ஆனால் தற்போது அவரால் 200க்கு கீழேதான் வருவார், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நிலை உள்ளது. 270 இடம் இருந்தால் ஒருவரால் ஆட்சிக்கு வர முடியும், அதில் 7இல் ஒரு பங்கு நாம் உள்ளோம். 

அதில் ஒன்றுதான் பெரம்பலூர் பாராளுமன்றம், நீங்கள் நினைப்பதை உங்களோடு இருந்து நிறைவேற்றி தருவேன்” என கே.என்.நேரு பேசினார்.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel