தமிழ் செய்திகள்  /  Elections  /  Lawyer Sudha Announced As Congress Candidate For Mayiladuthurai Parliamentary Constituency

Mayiladuthurai: 'திடீர் ட்விட்! ஒரு வழியாக மயிலாடுதுறை வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ்!’ யார் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Mar 26, 2024 09:09 PM IST

”ராகுல் காந்தி உடன் பாரத் ஜோடா யாத்திரையில் வழக்கறிஞர் சுதா பங்கேற்று இருந்தார்”

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

காங்கிரஸ் வேட்பாளர்கள்

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கடலூர் விஷ்ணுபிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், கரூரில் ஜோதிமணி, புதுச்சேரியில் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்

திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கும், மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி திருநெல்வேலி தொகுதிக்கு காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராபர்ட் புரூஸ் மற்றும் விளவங்கோடு சட்டம்ன்றத் தொகுதிக்கு தாரகை ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

மயிலாடுதுறை குழப்பம்!

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமைக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இத்தொகுதியில் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. 

மேலும், மணிசங்கர் ஐயர் மூத்த மகள் சுரண்யா ஐயரும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட விரும்பம் காட்டி வருவதாக கூறப்பட்டது. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி திருச்சி எம்.பியாக இருந்த திருநாவுக்கரர், மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்து காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

சுதாவை அறிவித்த காங்கிரஸ் தலைமை! 

இந்த நிலையில் நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுதா வேட்பாளராக அறிவிக்கப்படுள்ளார். 

WhatsApp channel