Sourav Ganguly: ‘முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே’ .. விராட்டை சீண்டிய அக்தரை வெளுத்து வாங்கிய கங்குலி!
விராட் கோலி பற்றி பாகிஸ்தான் அதிவேக பவுலர் சோயிப் அக்தர் சொன்ன கருத்திற்கு சவுரவ் கங்குலி பதிலடி கொடுத்திருக்கிறார்.
விராட் கோலியும், சவுரவ் கங்குலியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்பது கிரிக்கெட் வட்டாரத்திற்கு ஏற்கனவே தெரிந்த தகவல்தான். கங்குலி கடந்த 2001ம் ஆண்டு முதல் 2005 வரை கேப்டனாக பதவி வகித்த நிலையில், கோலி 2015ம் ஆண்டு முதல் 2021 வரை கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார். ஆகையால் இருவரும் பெரிதாக பார்த்துக்கொண்டது கூட கிடையாது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிவேக பவுலர் சோயிப் அக்தர் விராட் கோலி ஓய்வு குறித்து சொன்ன கருத்திற்கு கங்குலி பதில் அளித்திருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய சோயிப் அக்தர், “ விராட் கோலி டி 20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, முழு கவனத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கடக்க முடியும்.
எனக்குத்தெரிந்து உலக கோப்பைக்குப் பிறகு விராட் அதிகமான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் அடுத்த ஆறு ஆண்டுகளில் விளையாடி சச்சினின் சாதனையை முறியடிக்க வேண்டும். ஆகையால் அவர் அதற்காக டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் கங்குலி, “ ஏன்? விராட் கோலி எந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆசைப்படுகிறாரோ? அந்த போட்டிகளில் விளையாடலாம். காரணம் அவர் நன்றாக விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அவரது விளையாட்டுத்திறன் நன்றாகவே இருக்கிறது.
11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8676 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 5 வது இடத்தை பிடித்திருக்கிறார். 29 சதங்கள் அடித்து தன்னுடைய அவரேஜ்ஜை 49.29 என்ற கணக்கில் வைத்திருக்கிறார். 2018ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் ப்ளேயருக்கான விருதை வாங்கி இருக்கிறார். இதர போட்டிகளிலும் அவரின் செயல்திறன் நன்றாகவே இருக்கிறது.
நீங்கள் உங்கள் தரப்பில் நல்ல விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அவர் இடதுகை அல்லது வலது கை பேட்ஸ்மேனஸ் என யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அந்த விஷயத்தில் எங்கள் தரப்பு படு பயங்கரமாக இருக்கிறது. இந்தியா கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்