தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Aus Vs Pak 3rd Test: ஆஸி.,-பாக்., ஆட்டம் மழையால் நிறுத்தம்-ஆஸி., 197 ரன்கள் பின்னிலை

AUS vs PAK 3rd Test: ஆஸி.,-பாக்., ஆட்டம் மழையால் நிறுத்தம்-ஆஸி., 197 ரன்கள் பின்னிலை

Manigandan K T HT Tamil
Jan 04, 2024 11:01 AM IST

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஆஸி., வீரர் டேவிட் வார்னர், கவாஜா. (Photo by Saeed KHAN / AFP)
ஆஸி., வீரர் டேவிட் வார்னர், கவாஜா. (Photo by Saeed KHAN / AFP) (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், அமீர் ஜமால் ஆகியோரின் அரைசதத்தால் பாகிஸ்தான் அணி 313 ரன்கள் குவித்தது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்று 5 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தபோது சொற்ப இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டிய பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீரர்களை ஏமாற்றும் வகையில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர்.

ரிஸ்வான் 103 பந்துகளில் 88 ரன்களும், 9-ம் நிலை வீரர் ஜமால் 97 பந்துகளில் 82 ரன்களும், சல்மான் 67 பந்துகளில் 53 ரன்களும் அடித்து அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்தனர்.

மழை காரணமாக ஆட்டம் நிறுத்தம்: ஃப்ளட் லைட்டுகள் எரிந்து கொண்டிருக்கின்றன, ஆனால் எப்படியோ ஆட்டம் தொடர இது போதுமானதாக இல்லை என்று நடுவர்கள் எண்ணினர். ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக, வார்னர் 34 ரன்களிலும், கவாஜா 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மார்னஸ் லபுசேன் 23 ரன்களிலும், ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 313 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது மூன்றாவது தொடர்ச்சியான ஐந்து விக்கெட்டுகளை 5-61 எடுத்தார். பாகிஸ்தானின் டாப் ஆர்டரை ஆஸ்திரேலிய காலி செய்தது, அதற்கு முன், மூன்றாவது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்டின் முதல் நாளில், லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடியதால் 313 ரன்கள் எடுக்க அந்த அணிக்கு உதவியது.

ஆஸி.,க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இன்று சிட்னியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக், சயின் அயூப் ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

பாக்., கிரிக்கெட் ரசிகர்கள் இப்படி ஆகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பின்னர் கேப்டன் ஷார் மசூத், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வந்தனர்.

எனினும், அவர்களது கூட்டணியை பாட் கம்மின்ஸ் தனது அபார பந்துவீச்சால் பிரித்தார். பாபர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சவுத் ஷகீல் 5 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஷான் மசூத்தும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 96 ரன்களை எடுத்து இருந்தது. பின்னர் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் அவருக்கு அகா சல்மான் தோள் கொடுத்தார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஹேஸில்வுட்டிடம் கேட்ச் ஆனார் ரிஸ்வான்.

அமெர் ஜமால் நிதானமாக விளையாடியதால் அந்த அணியால் ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. அவர் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அகா சல்மான் அரை சதம் விளாசினார். ஆஸி., கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஹேஸில்வுட், லயன், மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இவ்வாறாக 77.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் 313 ரன்களை எடுத்தது.

IPL_Entry_Point