Yamagandam Luck: எமகண்ட நேர பரிகாரம்.. இனி நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான்!
காரியத்தடையைப் போக்கும் எமகண்ட நேர தேங்காய் பரிகாரத்தின் சிறப்புகள் குறித்து காண்போம்.
வாழ்க்கையில் போராட்டம் இருப்பது சகஜம் தான். அப்படி சில விஷயங்கள் கைகளில் அருகில் வந்து விட்டு கிடைக்காமல் போய்விடும். ஆசைப்பட்ட சில விஷயங்களை இது கடுமையான உழைப்பை கொடுத்து அதன் அருகில் வரை சென்று விட்டு இறுதி கட்டத்தில் ஒன்றுமில்லாமல் திரும்பி விடுவார்கள். அப்படி ஒரு சூழ்நிலை இருப்பதிலேயே கொடுமையான நிலையாகும்.
ஒரு சிலருக்கு வியாபாரம், திருமணம், வேலை, படிப்பு உள்ளிட்டவை இதுபோல நடக்கும். இப்படி தோல்வியை சந்திக்க கூடியவர்களை தாசி இல்லாதவர்கள் என சமூகத்தில் முத்திரை குத்தி விடுவார்கள். இது போன்ற நிலைமை மோசமான நிலைமை தான்.
எந்த காரியத்தை தொட்டாலும் அது தடையாக அமையும் என நினைக்க வேண்டாம் பரிகாரத்தின் மூலம் அதை வெற்றியாக மாற்றலாம் என ஆன்மீகம் கூறுகிறது.
காரியத்தடை நீக்கும் பரிகாரம்
- இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை என்று செய்தால் மிகவும் விசேஷமாகும். செவ்வாய்க்கிழமை அன்று எமகண்ட நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். மற்ற நேரத்தில் செய்தால் இந்த பரிகாரத்திற்கு பலன்கள் இருக்காது என ஆன்மீகம் கூறுகிறது.
- செவ்வாய்க்கிழமை என்று எமகண்ட நேரத்தில் மூன்று தேங்காயை எடுத்து ஒரு நல்ல கனமான நூலால் பூ போல தொடுத்து கொள்ள வேண்டும்.
- அதன் இரண்டு பக்கமும் மாலை கட்டுவதற்கு ஏற்றவாறு நூலை விட்டு விட வேண்டும்.
- இந்த தேங்காய் மாலையில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் கோயிலுக்கு சென்று அந்த மாலையை விநாயகருக்கு சாட்சி வழிபாடு செய்தால் காரிய தடை அனைத்தும் நீங்கும், தொட்டதெல்லாம் துலங்கும் எனக் கூறப்படுகிறது.
- இந்த பரிகாரத்தை எமகண்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த தேங்காய் பரிகாரத்தை தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய வேண்டும்.
- முதலில் இந்த பரிகாரத்தை தொடங்கும் போது ஏதாவது உங்களுக்கு நடந்த காரிய கடையை மனதில் நினைத்துக் கொண்டு தொடங்க வேண்டும். அந்த காரியம் சரியாக முடிந்தவுடன் அடுத்த ஒரு காரியத்தை நினைத்து மீண்டும் பரிகாரத்தை தொடர வேண்டும்.
- ஒருவேளை நீங்கள் நினைத்த காரியம் விரைவில் முடிந்து விட்டால் இந்த பரிகாரத்தை ஏழு வாரங்கள் தொடர்ந்து செய்து முடித்த பிறகு அடுத்த பரிகாரத்தை தொடங்க வேண்டும்.
- இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வது மட்டுமல்லாமல் நீங்கள் செய்ய நினைக்கும் செயலை துணிச்சலோடு மன தைரியத்தோடு செல்வதற்கு களத்தில் இறங்க வேண்டும்.
- நீங்கள் இதுவரை அந்த காரியத்தில் கண்ட பெரிய தடைகள் அனைத்தும் விலகி வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இறங்க வேண்டும். மனநம்பிக்கையும் கடவுளின் ஆசியும் தான் இந்த காரிய கடவுளின் ஆசியும் தான் இந்த காரிய தடையை நீக்கும்.
(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்