Mahalakshmi Kataksham: வீட்டில் பணம், செல்வம் நிலைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யாதீர்கள்! லட்சுமி கடாட்சம் பெற வழிகள்
நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில தவறுகளால் வீட்டில் பணமும், செல்வமும் தங்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தப்பி தவறியும் கூட இதை செய்யாமல் இருந்தாலே நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தும் உங்களை வீட்டு போகாது.
உழைத்து சம்பாதிக்கும் பணத்தை தேவைப்படும் விஷயங்களுக்கு பார்த்து செலவழிப்பது எல்லோரும் பின்பற்றும் பிரதான விஷயமாக உள்ளது. இதனால் வீட்டில் பல்வேறு செல்வங்களையும் சேர்த்து கொள்ளலாம்.
அதே சமயம் பணத்தை சில முறைகளில் கையாண்டால் நீங்கள் சம்பாதித்த பணமும் சரி, செல்வமும் சரி தங்காமல் போக வாய்ப்பு உள்ளது. நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில தவறுகளால் கூட இவ்வாறு நிகழலாம். இதனை சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் உங்களது வீட்டில் பணமும், செலவமும் தங்காமல் இருக்க நாம் செய்யு தவறுகள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.
மற்றவருக்கு பணம் கொடுக்கும் போது வீட்டின் உள்ள இருந்தவாறு, வீட்டின் வெளியே இருப்பவருக்கு பணம் கொடுப்பது தவறான விஷயம் என கூறப்படுகிறது. பணம் வாங்கும் நபரை வீட்டின் உள்ளே அழைத்தோ அல்லது பணம் கொடுக்கும் நீங்கள் வீட்டின் வெளியே சென்றோ கொடுக்க வேண்டும்.
ஆனால் இதை செய்ய தவறும்பட்சத்தில் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி அருள் முழுமையாக போயிவிடும் என்கிறார்கள்.
பணவரவு இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் செவ்வாய்க்கிழமை பணம் கொடுக்கல், வாங்கலை வைத்து கொள்வது நலம் என கூறப்படுகிறது. இந்த நாளில் கொடுப்பவர்களுக்கு சரி, வாங்குவோருக்கும் சரி பணம் வரவானது அதிகரிக்கும்.
வீட்டு வாசப்படியில் வைக்கப்பட்டிருக்கும் உரல், அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவற்றில் அமரக்கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் குறைந்து கொண்டே போகும் என கூறுகிறார்கள்.
இரவு நேரத்தில் நமது வீட்டில் இருந்து பால், மோர், தண்ணீர் ஆகியவற்றை மற்றவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. இதை எடுத்த செல்பவர்கள் மகாலட்சுமி அம்சத்தை எடுத்து செல்வார்களாம்.
இரவு நேரங்களில் கண்டிப்பாக தயிர் சாப்பிடகூடாது. அ்வர் குபேரானாக இருந்தாலும் கூட பணவரவு இல்லாமல் போக வாய்ப்பு உள்ளதாம்.
வீட்டில் அமைந்திருக்கும் குத்துவிலக்கை தானாக அணையவிடக்கூடாது. அதே சமயம் வாயில் ஊதியவாறு அணைக்கவும் கூடாது. இதற்கு பதிலாக பூ அல்லது குச்சியை வைத்து அணைக்கலாம்
சனியனே என்ற வார்த்தையை கூறி யாரையும் திட்ட கூடாது. மிகவும் சக்திவாய்ந்த எதிர்மறை வார்த்தையாக இது இருப்பதுடன், வீட்டில் நேர்மறையான எண்ணங்கள் குறையலாம்
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்க வெற்றிலை, வாழை இலைகளை வாடவிடக்கூடாது. எனவே அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.
டாபிக்ஸ்