தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வெறும் ஐந்து கிராம்பை வைத்து 5 மணி நேரத்தில் ஒருவரை வசியம் செய்ய முடியுமா? இந்த நாட்கள் தான் உகந்த நாளாம்!

வெறும் ஐந்து கிராம்பை வைத்து 5 மணி நேரத்தில் ஒருவரை வசியம் செய்ய முடியுமா? இந்த நாட்கள் தான் உகந்த நாளாம்!

Divya Sekar HT Tamil
Mar 26, 2024 12:24 PM IST

உடலில் எந்த இடத்தில் வேர்வை அதிகமாக சுரக்கிறதோ அந்த இடத்தில் இந்த கிராம்பை நீங்கள் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் அக்குள் பகுதியில் வேர்வை அதிகமாக சுரக்கிறது என்றால் அந்த இடத்தில் இந்த கிராம்புகளை வைக்கலாம்.

கிராம்பு
கிராம்பு

நாம் இப்பொழுது பார்க்க போகும் தாந்திரீகம் மிகவும் சக்தி வாய்ந்த தாந்திரீகம். இதனுடைய ரிசல்ட் வெறும் 5 மணி நேரத்தில் நாம் பார்க்க முடியும் என்பதால் இது மிகவும் சக்தி வாய்ந்த தாந்திரீகமாக பார்க்கப்படுகிறது. இவ்வளவு ஈஸியான முறையில் 5 மணி நேரத்தில் வசியம் செய்யக்கூடியது என்பதால் இதன் செய்முறையை செய்யும்போது நாம் பயபக்தியுடன் ஆத்மார்த்தமாக செய்தால் மட்டுமே இதன் பலன் நமக்கு கிடைக்கும்.

முதலில் இந்த தாந்திரீகம் செய்ய தேவையான விஷயம் என்னவென்றால் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் செய்யக்கூடிய இந்த தாந்திரீகத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். நம்பிக்கை இருக்க வேண்டும். இதனை நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே சாத்தியமாகும். இதனால் என்ன தான் நடக்கப் போகிறது என முயற்சி செய்யும் நோக்கில் செய்தால் இதன் பலன் கண்டிப்பாக கிடைக்காது.

 எனவே நீங்கள் இந்த தாந்திரீகத்தை செய்யும் போது ஆத்மார்த்தமாகவும் நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் செய்தால் மட்டுமே இதன் பலன் கிடைக்கும். இந்த தாந்திரீகத்தை செய்ய நமக்கு தேவையான பொருள் வெறும் ஐந்து கிராம்பு இருந்தால் போதும். 

யார் யார் எல்லாம் வசியம் செய்யலாம்

இந்த தாந்த்ரீகத்தின் மூலம் யார் யார் எல்லாம் வசியம் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

கணவன் மனைவி இடையே பிரச்சனை இருக்கும் பட்சத்தில் இந்த தாந்த்ரீகத்தை கணவன் மனைவிக்கு பண்ணலாம் அல்லது மனைவி கணவனுக்கு பண்ணலாம்.

முதலாளிகள் தொழிலாளிக்காக இந்த தாந்திரீகத்தை செய்யலாம்.

அதேபோல பெற்றோர்கள் பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்காமல் இருக்கிறார்கள் என்றால் இது தாந்த்ரீகத்தை செய்யலாம். பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் இதனை செய்யலாம்.

இதனை காதலர்களும் பண்ணலாம் ஆனால் அந்த காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த தாந்திரீகத்தை முயற்சி செய்யலாம்.

இந்த தாந்திரீகத்தை எப்படி செய்வது

இந்த தாந்திரீகத்தை செய்ய உகந்த நாள் புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை.

உடலில் எந்த இடத்தில் வேர்வை அதிகமாக சுரக்கிறதோ அந்த இடத்தில் இந்த கிராம்பை நீங்கள் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் அக்குள் பகுதியில் வேர்வை அதிகமாக சுரக்கிறது என்றால் அந்த இடத்தில் இந்த கிராம்புகளை வைக்கலாம்.

 ஒரு அரை மணி நேரம் இந்த கிராம்பை வைக்கலாம். வெறும் ஐந்து கிராம்பு தான் வைக்க வேண்டுமா என்றால் அப்படி இல்லை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வைக்கலாம். ஆனால் ஐந்துக்கும் குறைவாக வைக்கக் கூடாது 5 கிராம் கண்டிப்பாக வைக்க வேண்டும். அதற்கு மேல் வைக்க வேண்டும் என்றால் அது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி நீங்கள் வைக்கலாம்.

அரை மணி நேரம் கழித்து அந்த கிராம்பை எடுத்து உங்கள் வலது கையில் வைத்துக் கொண்டு நீங்கள் யாரை வசியம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களின் நினைத்துக் கொண்டு மோகினி மந்திரத்தை சொல்ல வேண்டும். என்ன மந்திரத்தை நீங்கள் 36 முறை சொல்ல வேண்டும்.

மந்திரத்தை சொன்ன பிறகு நீங்கள் அந்த கிராம்பை அம்மிக்கல்லிலோ அல்லது இதிகளிலோ வைத்து பொடியாக்கி நீங்கள் யாரை வசியம் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களின் டீ அல்லது குடிக்கும் பானத்தில் இதனை கலந்து கொடுக்கலாம். இதனை புதன் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் நீங்கள் கொடுக்க வேண்டும்.

நன்றி : U Tube Kennady

WhatsApp channel

டாபிக்ஸ்