தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pariharam: உங்கள் வீட்டில் கடன் தொல்லை தீர்ந்து பணம் வந்து சேர வேண்டுமா? இதோ சூப்பர் பவர் பரிகாரம்

Pariharam: உங்கள் வீட்டில் கடன் தொல்லை தீர்ந்து பணம் வந்து சேர வேண்டுமா? இதோ சூப்பர் பவர் பரிகாரம்

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 30, 2023 12:15 PM IST

பூஜை அறையில் வைக்கும் போது தென் மேற்கு மூலையில் அதாவது கன்னி மூலையில் வைக்க வேண்டும். ஒரு சிறிய தட்டில் வைத்து ஒரே ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்தால் கூட போதும். இந்த கற்பூரம் கரையும் வரை வைத்து விடலாம். கற்பூரம் கரைந்த பின்னர் ஒரு புதிய துண்டு கற்பூரத்தை வைக்க வேண்டும்.

பச்சை கற்பூர பரிகாரம்
பச்சை கற்பூர பரிகாரம்

இப்படியான கவலைகளை தவிர்த்து விடுங்கள். இனிமேல் கவலை வேண்டாம். இந்த பொருட்களை மட்டும் வைத்து பரிகாரத்தை செய்யுங்கள். அதில் முக்கியமான பொருள் என்ன தெரியுமா. அதுதான் பச்சை கற்பூரம். இந்த பச்சை கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரங்களை மட்டும் கண்டிப்பாக செய்து பாருங்கள்.

பச்சை கற்பூரம் ஒரு மூலிகை ஆகும். இந்த பச்சை கற்பூரத்தை தீபம் ஏற்ற கண்டிப்பாக பயன்படுத்த கூடாது.

பச்சை கற்பூரத்தை நமது பர்ஸ் பீரோ, பூஜை அறை உள்ளிட்ட இடங்களில் வைக்கலாம். இதன் மூலம் நம்வீட்டில் கடன் தொல்லை நீங்கி பணம் வந்து சேரும். எப்போது பாசிட்டீவ் ஆன எனர்ஜி உண்டாகும்.

பூஜை அறையில் வைக்கும் போது தென் மேற்கு மூலையில் அதாவது கன்னி மூலையில் வைக்க வேண்டும். ஒரு சிறிய தட்டில் வைத்து ஒரே ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்தால் கூட போதும். இந்த கற்பூரம் கரையும் வரை வைத்து விடலாம். கற்பூரம் கரைந்த பின்னர் ஒரு புதிய துண்டு கற்பூரத்தை வைக்க வேண்டும்.

இதேபோல் பீரோவில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் கூட இந்த கற்பூர பரிகாரத்தை செய்யலாம். பீரோவில் வைக்கும் போது ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பச்சை கற்பூரம், கொஞ்சமாக சோம்பு, 4 கிராம்பு, இரண்டு ஏலக்காயை பொடித்து அந்த கிண்ணத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். அதை மூடி வைக்காமல் அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்.

நமது வீட்டில் ஏதோ தீய சக்தி இருப்பதாக நினைத்தால், உங்கள் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்தால் பயம் நீங்கும்.

உங்கள் பணம் வைக்கும் பர்ஸில் எப்போது ஒரு பச்சை கற்பூரத்தை வைத்தால் போதும். பணத்தை ஈர்க்கும் சக்தி உருவாகும்.

அதேபோல் உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என நினைத்தால் அவர்களது புத்தக பையில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு விட்டால் போதும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்