Aadi Perukku Worship: வீட்டில் வைத்தே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!
ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வைத்தே வழிபாடு செய்யும் முறைகளையும், வழிபாடு செய்யும் நேரம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. அதேபோல் நதித்துறை அருகில் இல்லாதவர்கள் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து படைப்பது, வடை,பாயசம் உள்ளிட்டவைகள் செய்து இலை போட்டு படைப்பதும் வழக்கமாக சிலர் வைத்துள்ளனர்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
ஆடிப்பெருக்கு அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பொதுவான நாளாக இருந்து வருகிறது. ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு, ஆடி பதினெட்டு என அழைக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்கிற வழக்கம் கடைப்படிக்கப்பட்டு வருகிறது. அப்படியே எதாவது ஒரு காரியத்தை செய்ய விரும்பினாலும், ஆடி பெருக்கு நாளில் அதை செய்தால் அவை பெருகி வளம் பெருகும் என்ற நம்பிக்கை இருப்பதால், அந்த நாளில் திருமணம் தொடர்பான ஏற்பாடுகள், புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றை செய்யலாம்.
பொதுவாக இந்த நாளில் குளம், ஆற்றங்கரை பகுதிகளில் கூடும் மக்கள் மஞ்சளை வைத்து பிள்ளையார் செய்து, தேங்காய், பழம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை படைத்து வழிபடுகிறார்கள். பெண்கள் பலரும் புதிய தாலி காயிற்றை மாற்றி கொள்வார்கள்.