Aadi Perukku Worship: வீட்டில் வைத்தே ஆடிப்பெருக்கு பூஜைகளை செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!
ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வைத்தே வழிபாடு செய்யும் முறைகளையும், வழிபாடு செய்யும் நேரம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. அதேபோல் நதித்துறை அருகில் இல்லாதவர்கள் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து படைப்பது, வடை,பாயசம் உள்ளிட்டவைகள் செய்து இலை போட்டு படைப்பதும் வழக்கமாக சிலர் வைத்துள்ளனர்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
ஆடிப்பெருக்கு அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பொதுவான நாளாக இருந்து வருகிறது. ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு, ஆடி பதினெட்டு என அழைக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்கிற வழக்கம் கடைப்படிக்கப்பட்டு வருகிறது. அப்படியே எதாவது ஒரு காரியத்தை செய்ய விரும்பினாலும், ஆடி பெருக்கு நாளில் அதை செய்தால் அவை பெருகி வளம் பெருகும் என்ற நம்பிக்கை இருப்பதால், அந்த நாளில் திருமணம் தொடர்பான ஏற்பாடுகள், புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றை செய்யலாம்.
பொதுவாக இந்த நாளில் குளம், ஆற்றங்கரை பகுதிகளில் கூடும் மக்கள் மஞ்சளை வைத்து பிள்ளையார் செய்து, தேங்காய், பழம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை படைத்து வழிபடுகிறார்கள். பெண்கள் பலரும் புதிய தாலி காயிற்றை மாற்றி கொள்வார்கள்.
