Sani kubera Luck: சனியின் சஞ்சாரத்தால் உச்சம் செல்லும் 4 ராசிக்காரர்கள்
சனி பகவானால் ராஜ வாழ்க்கையில் வாழப் போகும் நான்கு ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். நீதிமானாக விளங்கக்கூடிய இவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை கொடுக்க கூடியவர். சனிபகவானை கண்டு பலரும் அச்சப்படுகின்றனர். நன்மை செய்பவர்களுக்கு நன்மையும், தீமை செய்பவர்களுக்கு இரட்டிப்பாக தீமையையும் சீராக கொடுக்கக் கூடியவர் சனி பகவான்.
ஒரு ராசியில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் தங்கி பயணம் செய்யக் கூடியவர். சனிபகவான் கும்பம் மற்றும் மகர ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் இருக்கும். சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். இதன் மூலம் நான்கு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளதால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. 2025 வரை உங்களுக்கு அதிகப்படியான செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்படுகிறது. உங்கள் ராசிகள் 11ம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் பொருளாதார நிலையில் எந்த சிக்கல்களும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உயர்நிலை கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
ரிஷப ராசி
சனிபகவான் பத்தாம் வீட்டில் செஞ்சாரம் செய்கிறார். உங்கள் ராசியில் பத்தாம் இடம் அதிர்ஷ்டம், செல்வம் பெருகக்கூடிய இடமாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்ம ராசி
சனிபகவானின் ஆசிகள் எப்போதும் உள்ள ராசிக்காரர் நீங்கள். 2025 வரை கும்ப ராசியில் இருக்கும் சனிபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறார். உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்து வருகிறார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். தொடங்கிய வேலைகளில் வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் அனைத்தும் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும்.
துலாம் ராசி
சனிபகவான் உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனிபகவான் அருள் ஆசி எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் உள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்