தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi Palan: குரு பெயர்ச்சி.. சித்திரையில் ராஜயோகம் பெறுகின்ற ராசிகள்

Guru Peyarchi Palan: குரு பெயர்ச்சி.. சித்திரையில் ராஜயோகம் பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 24, 2024 12:44 PM IST

குரு பகவானின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் நவகிரகங்களின் ராஜகுருவாக விளங்கக்கூடியவர் குருபகவான். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் மாறும் பொழுது கார்த்திகை, மிருகஷுரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வார். இதனால் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் உங்களுடைய வாக்குறுதி காப்பாற்றப்படும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இடம் மாறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெற்றி பெறுவதற்கான பலன்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

மே மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். தொட்டதெல்லாம் உங்களுக்கு சிறப்பான காரியமாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel