தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Deepam Benefits: வீட்டில் ஏன் மாலையில் கூட விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கை ஏற்றி வைப்பதன் அர்த்தம் என்ன?

Deepam Benefits: வீட்டில் ஏன் மாலையில் கூட விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கை ஏற்றி வைப்பதன் அர்த்தம் என்ன?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 05, 2024 07:02 AM IST

அறியாமை இருளைப் போக்கி, எங்கும் அறிவின் ஒளியைப் பரப்பும் பரமாத்மாவின் திருவுருவமே விளக்கு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என்று பிரபல ஆன்மிகவாதியும், பஞ்சாங்ககர்த்தா பிரம்மஸ்ரீ சில்கமர்த்தி பிரபாகர சக்ரவர்த்தி சர்மா கூறினார்.

வீட்டில் ஏன் மாலையில் கூட விளக்கு ஏற்ற வேண்டும்
வீட்டில் ஏன் மாலையில் கூட விளக்கு ஏற்ற வேண்டும் (Pixabay)

சனநாத தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் தீபம் இல்லாமல் எந்த ஒரு தெய்வ வழிபாட்டையும் செய்யக்கூடாது. திரி சந்தியாக்கள் அதாவது சூரியன் உதிக்கும் நேரம், அபிஜித் தொடர்புடைய மதியம், மாலையில் பிரதோஷத்துடன் தொடர்புடைய அந்தி நேரம் ஆகிய மூன்று வேளைகளிலும் தீபாராதனை செய்வது மிகவும் உகந்தது என பிரபல ஆன்மிக, பஞ்சாங்கர் பிரம்மஸ்ரீ சிலகமர்த்தி பிரபாகர சக்கரவர்த்தி சர்மா கூறி உள்ளார்.

மாலையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரிய அஸ்தமனத்திற்கு முன் வீட்டை சுத்தம் செய்து, அந்தி சாயும் வேளையில் வீட்டு வாசலுக்கு வெளியே உள்ள துளசி மாடத்தில் உள்ள மேடையில் மந்திரங்கள் உச்சரித்து தீபம் ஏற்றி லட்சுமி தேவியை வரவேற்கும் சடங்கின் ஒரு பகுதியாக மாலை விளக்குகள் சிறப்பு பெற்றதாக சில்கமர்த்தி பிரபாகர சக்கரவர்த்தி சர்மா கூறினார்.

ஒரு விளக்கு எப்போதும் ஒரு அபிமான பிரகாசம். தீபத்தை தீபலட்சுமி என்று வழிபடுகிறார்கள். எவருடைய வீடுகளில் எப்பொழுதும் விளக்கேற்றி இருப்பார்களோ அவர்களே உண்மையான செல்வந்தர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அறியாமை இருளைப் போக்கி, எங்கும் அறிவின் ஒளியைப் பரப்பும் பரமாத்மாவின் திருவுருவமே விளக்கு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என்று பிரபல ஆன்மிகவாதியும், பஞ்சாங்ககர்த்தா பிரம்மஸ்ரீ சில்கமர்த்தி பிரபாகர சக்ரவர்த்தி சர்மா கூறினார்.

நேரம்

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் நல்ல பலன்களை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில், எந்த எண்ணெய் கொண்டு தீபமேற்றினால் என்னென்ன பலன்கள் என்பதைப் பற்றி பார்ப்போம்.

எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்ற வேண்டும்

ஒவ்வொரு எண்ணெய் தீபத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது ஜோதிடம் சாஸ்திரம். சாஸ்திரங்கள் படி நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும். விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால் மதிப்பும் மரியாதையும் கூடும். தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும். மனதில் உள்ள குழப்பங்களும் பிரச்னைகளும் தீரும். நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும்.

ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோயில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும். தீபம் ஏற்றப்பட்டதில் இருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது நம் குடும்பத்திற்கு கெடுதலைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம். எனவே விளக்கேற்றி அணைக்கும் போது கவனமாக செயல்படவும்.

WhatsApp channel