தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: மக்களே உஷார்.. சிறுமிகளைக் குறி வைக்கும் டிப் டாப் வாலிபர்!

Crime: மக்களே உஷார்.. சிறுமிகளைக் குறி வைக்கும் டிப் டாப் வாலிபர்!

Aug 06, 2023, 08:04 AM IST

கடன் வசூலிக்க வந்த நபர் போல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இளைஞர் தப்பி ஓட்டம்.
கடன் வசூலிக்க வந்த நபர் போல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இளைஞர் தப்பி ஓட்டம்.

கடன் வசூலிக்க வந்த நபர் போல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இளைஞர் தப்பி ஓட்டம்.

புதுச்சேரி அருகே உள்ள தமிழ்நாடு பகுதியான கோட்டம் குப்பம் அருகே வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி வீட்டிற்குத் தனியார் வாகனம் கடன் வசூல் செய்வதாகக் கூறி டிப்டாப் உடைய அணிந்து இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

வீட்டிலிருந்த கட்டிடத் தொழிலாளியின் மனைவியிடம் உங்கள் கணவர் வாகனம் வாங்கி இருப்பதாகவும், அதற்கான மாதத் தவணையைக் கட்டவில்லை எனவும் கூறியுள்ளார் அந்த இளைஞர்.

உடனே கட்டிடத் தொழிலாளியின் மனைவி, அப்படி எந்த வாகனமும் நாங்கள் வாங்கவில்லை எனக் கூறிவிட்டு, உடனே கணவருக்கு தொலைப்பேசியில் அழைத்து, கடன் வசூல் செய்வதற்காக வங்கியில் இருந்து வங்கியில் இருந்து ஒருவர் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உடனே கட்டிடத் தொழிலாளி, நான் ஏதும் கடன் வாங்கவில்லை உடனே வீட்டிற்கு வருகிறேன் எனத் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞருக்கும், கட்டிடத் தொழிலாளியின் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெளியே விளையாடச் சென்றிருந்த கட்டிடத் தொழிலாளியும் 8 வயது மகள், தனது அம்மாவிடம், இவர்தான் எனது ஆடைகளைக் கழட்டச் சொல்லி பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

உடனே அதிர்ச்சியடைய இந்த தொழிலாளியின் மனைவி அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். பைக்கில் வந்த அந்த இளைஞர். ஊர் மக்கள் அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற போதும், அவர் எங்குச் சென்றார் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிப் டாப் இளைஞரைத் தேடி வருகின்றனர்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி