தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore : கோவையில் திக் திக்.. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெண் எடுத்த விபரீத முடிவு!

Coimbatore : கோவையில் திக் திக்.. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெண் எடுத்த விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil

Sep 25, 2023, 08:07 AM IST

கோவையில் மன அழுத்தத்தால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மன அழுத்தத்தால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் மன அழுத்தத்தால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், காவேரி வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

இவருடைய மனைவி பூரணி (55) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பூரணி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பூரணி திடீரென மாயமானார். பக்கத்து வீட்டிற்கு போய் இருப்பார், கடைக்கு போய் இருப்பார் என குடும்பத்தினர் நினைத்து உள்ளனர்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. குடும்பத்தினருக்கு அவர் மன அழுத்ததில் இருப்பதால் ஏதாவது தவறான முடிவு எடுத்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர்.

பின்னர் அவர்கள் எதற்கும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்க்கலாம் என பார்த்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தண்ணீர் தொட்டிக்குள் பூரணி பிணமாக மிதந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி துடித்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து வந்து உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ் விசாரணையில் பூரணி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த 25 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மன அழுத்தத்தால் பெண் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி