Thoothukudi : மாணவர்களே ஹாப்பி நியூஸ்! தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
Aug 05, 2023, 07:58 AM IST
Thoothukudi : பனிமய மாதா ஆலய தேரோட்டத்தை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
பனிமய மாதா ஆலய தேரோட்டத்தை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441 வது திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 26ம் தேதி துவங்கியது. ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று தங்கத்தேர் பவனி திருவிழா நடக்கிறது.
தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது பனிமய மாதா பேராலயம். உலகப் பிரசித்திபெற்ற இப்பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுத் திருவிழா ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தத் திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக 10ம் நாள் நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர்ப்பவனி நடைபெறும். அந்த முக்கிய திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்