தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fishermen : மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை - படகு நாட்டுடமை.!

Fishermen : மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை - படகு நாட்டுடமை.!

Divya Sekar HT Tamil

Mar 17, 2023, 11:45 AM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்டம் அக்கரை பேட்டை சேர்ந்த 12 மீனவர்களை 17ஆம் தேதியான இன்று வரை சிறைகாவலில் வைக்க இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று மீனவர்கள் இரண்டாம் முறையாக ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையுடன் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து அங்குள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஒரு சில தினங்களில் மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான விசைப்படகு அந்நாட்டு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அதில்,''நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 12ம் தேதி இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 மற்றும் IND-TN-06-MM-7818) சிறைபிடிக்கப்பட்டனர். இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த சிலர் / இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது சம்பவம் இது.

மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன.

இந்த விவகாரத்தை மாண்புமிகு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்றேன். வெளியுறவுத் அமைச்சரும் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் நீங்கள்(பிரதமர்) உடனடியாக இதில் தலையிடவேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி