தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Bus Accident: கால்வாயில் கவிழ்ந்து பள்ளி வாகனம் விபத்து - 4 பேர் காயம்

School bus accident: கால்வாயில் கவிழ்ந்து பள்ளி வாகனம் விபத்து - 4 பேர் காயம்

Nov 29, 2022, 08:19 AM IST

சுவாமியார் மடம் அருகே கால்வாயில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
சுவாமியார் மடம் அருகே கால்வாயில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சுவாமியார் மடம் அருகே கால்வாயில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்களம்பு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனம் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றது. அப்போது பேருந்தில் பாதுகாவலர் உள்பட் இரண்டு குழந்தைகள் பயணித்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

பள்ளி பேருந்து சுவாமியார் மடம் அருகே வந்தபோது அங்கிருந்த பட்டணம் கால்வாய் பகுதியில் எதிரில் வந்த வாகனத்துக்கு வழிவிட்டபோது கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தையடுத்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் கால்வாயில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கிய 2 குழந்தைகள், பாதுகாவலர் மற்றும் ஓட்டுநரை மீட்டனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி