தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ponmudi: திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் கட்! மீண்டும் அமைச்சர் ஆகிறாரா பொன்முடி? என்ன செய்ய போகிறார் ஆளுநர்?

Ponmudi: திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் கட்! மீண்டும் அமைச்சர் ஆகிறாரா பொன்முடி? என்ன செய்ய போகிறார் ஆளுநர்?

Kathiravan V HT Tamil

Mar 11, 2024, 03:35 PM IST

”முதலமைச்சர் தனது அமைச்சரவையில் பொன்முடியை சேர்க்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்வாரா?; அப்படி செய்தால், வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.”
”முதலமைச்சர் தனது அமைச்சரவையில் பொன்முடியை சேர்க்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்வாரா?; அப்படி செய்தால், வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.”

”முதலமைச்சர் தனது அமைச்சரவையில் பொன்முடியை சேர்க்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்வாரா?; அப்படி செய்தால், வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.”

திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

Weather Update: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்! வெளுக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்த தீர்ப்பு காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை விரைவில் சட்டப்பேரவை செயலகம் திரும்ப பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சொத்துக்குவிப்பு வழக்கின் பின்னணி

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு ஏதுவாக ஒரு மாத காலம் நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்திருந்தார். 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து புதிய உயர்க்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ஆம் ஆண்டில் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2006 ஏப்ரல் 13 முதல் 2010 மே 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக கூறப்பட்டது. இது வருமானத்தை விட 65.99 சதவிகிதம் அதிகம் ஆகும்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

தண்டனை நிறுத்தி வைப்பு

இந்த வழக்கின் தீர்ப்ப்பு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் பொன்முடி உள்ளிட்டோர் மீதான சிறை தண்டனை நிறுத்தி வைத்துள்ளதுடன், ஜாமீனும் வழங்கி இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.

திருக்கோவிலூரில் இடைத்தேர்தல் கட்!

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக அரசியல் களத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் தொடர்ந்து எம்.எல்.ஏவாக தொடர சட்டம் அனுமதிக்கிறது.

கடந்த மார்ச் 5ஆம் தேதி அன்று திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த தீர்ப்பு காரணமாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட  உயர்க்கல்வித்துறை இலாகா மீண்டும் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டாலும், கட்சி செயல்பாடுகளில் பொன்முடி தீவிரம் காட்டி வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் உடன் பேசுவதற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவிலும் பொன்முடியை திமுக தலைமை இடம் பெறச் செய்திருந்தது. 

இந்த நிலையில், முதலமைச்சர் முடிவு செய்தால் மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  

ஒரு வேளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தனது அமைச்சரவையில் பொன்முடியை சேர்க்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்வாரா?; அப்படி செய்தால் நீதிமன்றத்தில் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

அடுத்த செய்தி