தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Murder : தகாத உறவால் நேர்ந்த விபரீதம்.. மதுவில் விஷம் வைத்து கொலை..!

Palani Murder : தகாத உறவால் நேர்ந்த விபரீதம்.. மதுவில் விஷம் வைத்து கொலை..!

Divya Sekar HT Tamil

Feb 14, 2023, 12:37 PM IST

பழனி அருகே சுரேஷ் என்பவரை மதுவில் விஷம் வைத்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பழனி அருகே சுரேஷ் என்பவரை மதுவில் விஷம் வைத்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

பழனி அருகே சுரேஷ் என்பவரை மதுவில் விஷம் வைத்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மகேஸ்வரி (44). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுரேஷ் (39) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

இந்நிலையில், சுரேஷ் (39) கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பழனி அரசு மருவமனையில் சேர்க்கப்பட்டார். சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மரணமடைந்த சுரேஷ் பூலம்பட்டியை சார்ந்த கணவனை இழந்த உறவினர் பெண் மகேஸ்வரி (44) என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சுரேஷ் உடனான தொடர்பை துண்டிக்குமாறு மகேஸ்வரியின் தம்பியான பெருமாள் புதூரைச் சேர்ந்த கருப்புச்சாமி (36 ) என்பவர் கண்டித்து வந்துள்ளார்.

இதனை சுரேஷும், மகேஸ்வரியும் கேட்காமல் தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி சுரேஷ் தனது நண்பர் பூலாம்பட்டியைச் சேர்ந்த சவரத் தொழிலாளியான மணிமாறன் (25) என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திய பின் வாந்தி எடுத்து  மயக்கமடைந்த நிலையில் சுரேஷை, பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

சுரேஷின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள்  இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மதுவில் விஷம் கலந்து குடித்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷுடன் வாழ்ந்துவந்த மகேஸ்வரி, சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் உடன் தொடர்பை கைவிட மறுத்த மகேஸ்வரியின் மீது ஆத்திரம் கொண்ட, அவரது சகோதரர் கருப்புசாமி சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது . இதன்படி சுரேஷின் நண்பரான மணிமாறனை  வைத்து கருப்புசாமி மது பாட்டிலில் விஷம் கலந்து சுரேஷ்க்கு கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து போலீசார் மகேஸ்வரியின் சகோதரர் கருப்புசாமி மற்றும் நண்பர் மணிமாறன் ஆகியோரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி