தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Public Exam: பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி ஹேப்பி தான்-பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு!

Public Exam: பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி ஹேப்பி தான்-பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு!

Divya Sekar HT Tamil

Apr 03, 2023, 08:07 AM IST

தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு முழுவதும் தனித்தேர்வர்கள் உள்பட 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். அதில் மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும் ஆவர். சிறைவாசிகள் 90 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 185 மையங்களில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், பொருளியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெறுகிறது.

இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் மட்டும் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வு முடிவதை அடுத்து பெரும்பாலான பள்ளிகளில் பிரிவு உபசார விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10 முதல் 21-ம் தேதி நடைபெற உள்ளன. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை மறுதினம் (ஏப்ரல் 05 ) முடிவடைய உள்ளது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 88 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்கள் 5 ஆயிரத்து 300 பேரும் எழுதுகின்றனர். நாளை மறுதினம் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உள்பட 9 பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி