தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ! கலாய்த்துவிட்ட ஜெயக்குமார்!

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ! கலாய்த்துவிட்ட ஜெயக்குமார்!

Kathiravan V HT Tamil

Feb 23, 2023, 11:55 AM IST

"ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர யார் கட்சிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரவணைப்பார்"
"ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர யார் கட்சிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரவணைப்பார்"

"ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர யார் கட்சிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரவணைப்பார்"

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,  ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது, எப்போதும் கௌரவர்கள் வென்றதாக சரித்திரமில்லை; அவர்கள் எவ்வுளவுதான் சூழ்ச்சி செய்தாலும் இறுதி வெற்றி பாண்டவர்களுக்குத்தான். 

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ

இந்த தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரைக்கோடி தொண்டர்களுக்கு கிடைத்த தீர்ப்பு. இனிமேல் ஓபிஎஸ்க்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது.அவருடைய அரசியல் எதிர்காலம் ஜீரோதான்.

ஓபிஎஸ், சசிகா, டிடிவிக்கு இடமில்லை

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர யார் கட்சிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி அரவணைப்பார். உச்சநீதிமன்றத்தீர்ப்பை சட்டமன்றமும் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சி தற்போது உள்ளது.

அதிமுக இனி நூற்றாண்டுகளுக்கு தழைக்கும்

தலைமைக்கழகத்திற்கு அடியாட்களுடன் வந்து இதயதெய்வம் மாளிகையை எட்டி உதைத்ததையும், கருணாநிதியை புகழ்வதையும், பலவகைகளில் திமுகவின் ‘பி டீம்’மாக இருப்பவரை தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி இல்லாத அதிமுகதான் இனி நூற்றாண்டு காலம் தழைக்கும்.

ஓபிஎஸை ஆதரிப்பவர்கள் ஈபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள்

ஓபிஎஸ் தர்மயுத்தத்தை சசிகலா குடும்பத்தை எதிர்த்து தொடங்கினார், ஆனால் விசாரணை கமிஷனில் அம்மா மரணத்தில் சந்தேகமில்லை என கூறினார். சசிகலாவை தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என கூறியதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். கருத்து என்பது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், திமுக சார்ந்து இல்லாமல் இருந்தால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓபிஎஸை ஆதரிக்கும் கொஞ்சம்பேரும் எடப்பாடியார் தலைமையை விரைவில் ஏற்றுக்கொள்வார்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி