தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Salem Crime : ஷாக்.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர்.. சேலத்தில் நடந்த கொடூரம்!

Salem Crime : ஷாக்.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர்.. சேலத்தில் நடந்த கொடூரம்!

Divya Sekar HT Tamil

Aug 01, 2023, 10:38 AM IST

சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை முதியவர் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை முதியவர் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை முதியவர் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணி ( 63). இவர் மனநல பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். அவர் தற்போது 8 மாதமாக கர்ப்பமாகி உள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கூடமலை அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பெண்ணின் அண்ணன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து முதியவர் மணியை கைது செய்தனர்.

இதேபோல கடந்த வாரம் சேலத்தில் இரவு நேரத்தில் கடைக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இழுத்துச் சென்று முட்புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சேலம் மாட்டம் கருப்பூர் அருகே வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு சுமார் 9:00 மணி அளவில் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு சென்ற பெண் வரவில்லை. அவரது சகோதரர் தேடி உள்ளார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள முட்புதரில் இருந்து தனது சகோதரி வெளியே வந்ததை பார்த்துள்ளார்.

அங்கு சென்று பார்த்தபோது காயமடைந்த நிலையில் கிடந்த சகோதரியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை யடுத்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவம் குறித்து அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனநலம்பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி