தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tenkasi Crime : டார்ச்சர் தாங்க முடியாமல் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.. கணவர் எடுத்த விபரீத முடிவு!

Tenkasi Crime : டார்ச்சர் தாங்க முடியாமல் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.. கணவர் எடுத்த விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil

Sep 25, 2023, 08:31 AM IST

தென்காசியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, மீனாட்சிபுரம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சுல்தான். இவரின் மகன் கனியப்பா ( 23). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

அங்குள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெண் சுப்புலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை எதிர்த்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கனியப்பா சரிவர வேலைக்கு செல்லாமல் மதுபோதைக்கு அடிமையாகி இருக்கிறார்.

 இதனால் வறுமானம் இன்றி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. மேலும் கனியப்பா மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சுப்புலட்சுமி தாய் வீட்டிக்கு செல்ல முடிவு எடுத்தார்.

சம்பவத்தன்று கணவரிடம் சண்டையிட்ட சுப்புலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்த கனியப்பாவுக்கு விரக்தி ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து வந்த செங்கோட்டை காவல் துறையினர், கனியப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தான் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி