தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Bypoll: இடைத்தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விருப்ப மனு!

Erode East bypoll: இடைத்தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விருப்ப மனு!

Manigandan K T HT Tamil

Jan 22, 2023, 01:30 PM IST

Erode East bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.
Erode East bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.

Erode East bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.

இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடக்க உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’சிறையில் வேறு இடம் வேண்டும்!’ நீதிபதியிடம் கேட்ட சவுக்கு சங்கர்! காவலை நீட்டித்த நீதிபதி!

Freshworks Jobs: ‘+2 முடிச்சா IT வேலை ரெடி! பயிற்சியின் போது 10 ஆயிரம் சம்பளம்! அப்புறம் பல லட்சத்தில் சம்பளம்!’

Weather Update: ’தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கோடை மழை! குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!’

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

இந்த இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஈரோடு இடைத்தேர்தலில் யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சஞ்சய் சம்பத் விருப்ப மனு

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு கொடுத்துள்ளார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் சஞ்சய் சம்பத் விருப்ப மனு அளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனும் கோரியிருக்கிறார். இதனால், யார் வேட்பாளர் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

காங்கிரஸ் வெற்றி பெறும்-தினேஷ் குண்டுராவ் பேட்டி

இதனிடையே, காங்கிரஸ் தலைமை தான் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து முடிவு செய்யும் என்று தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது “இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். காங்கிரஸ் தான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும்” என்றார்.

இ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகனும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி