தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாண்டஸ் புயல்: டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல்: டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Karthikeyan S HT Tamil

Dec 08, 2022, 09:44 PM IST

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் நாளை (டிச.9) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

இதைத்தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்கப்படுவதாக, எதிர்பார்க்கப்படும் புயல் (Cyclonic Storm) காரணமாக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் நாளை (09.12.2022) நடைபெறவிருந்த அனைத்து எழுத்துமுறை மற்றும் செயல்முறை (Theory and Practical) தேர்வுகள் தற்போதைக்கு தள்ளி வைக்கப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் செம்ஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 16ம் தேதி தேர்வு நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி