Crime: துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சி, நடந்தது என்ன?
Jan 24, 2023, 12:44 PM IST
Robbery Attempt in Dindigul: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியின் இன்று காலை ஒரு இளைஞர் மிளகாய் பொடி பேப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து மிளகாய் பொடியைத் தூவி ஸ்பிரே அடித்துள்ளார்.
வங்கியில் மூன்று நபர்கள் பணி செய்து வந்த நிலையில் 3 வங்கி ஊழியர்களையும் பிளாஸ்டிக் டேக்கை வைத்து கையை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முயன்ற போது, வங்கி ஊழியர் ஒருவர் வெளியே வந்து பொதுமக்களை கூச்சலிட்டு அழைத்ததால் பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி உதவியுடன் காவல்துறையினரிடம் கொள்ளையனை பிடித்து ஒப்படைத்தனர்.
மேலும் திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் கொள்ளையனை தீவிர விசாரணை செய்த போது, திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் (25) என்பதும் சினிமாவை பார்த்து தான் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும் தற்போது வந்துள்ள துணிவு படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் வாழ்க்கையை வெறுத்து விட்டதாகவும் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.
துணிவு படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் கதைக்களம் வங்கியில் கொள்ளை அடிப்பதை கொண்டிருக்கும். இதுபோன்ற படங்களை பார்த்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்