தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் உயிரிழப்பு!

குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil

Aug 03, 2022, 01:21 PM IST

திருப்பூர் சேவூர் அருகே குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் சேவூர் அருகே குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சேவூர் அருகே குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : சேவூர் அருகே உள்ள கருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கன்னியப்பன் - ஜமுனா தம்பதி. இவர்களது 11 வயது மகன் சஞ்சய். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சஞ்சய், தனது வீட்டின் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

அப்போது, அங்கு இருந்த பூச்சி மருந்தை குளிர்பானம் என கருதி, அவர் குடித்துள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்படவே, அந்த பாட்டிலை காண்பித்து தான் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பபம் குறித்து சிறுவனின் தந்தை கன்னியப்பன் சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிர்பானம் என நினைத்து விஷத்தை குடித்த பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி