தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ancient Sculptures : களத்தூரில் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Ancient Sculptures : களத்தூரில் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Divya Sekar HT Tamil

Mar 08, 2024, 10:29 AM IST

திருவில்லிபுத்தூர் அருகே களத்தூரில் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவில்லிபுத்தூர் அருகே களத்தூரில் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவில்லிபுத்தூர் அருகே களத்தூரில் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் கூறியதாவது, ”திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார்.

முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர் பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன.

இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது.

களத்தூரில் பழமையான சிற்பங்கள்

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ உயரம் 7 செ.மீ. ஆகும். இதன்மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.

இவ்வூருக்கும் அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்” என கேட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

களத்தூரில் பழமையான சிற்பங்கள்

இந்து மதத்தில் மகாசிவராத்திரிக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. பால்குன் மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் நான்காவது நாளில் மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், பால்குன் மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் நான்காவது நாள் மார்ச் 8, 2024 வெள்ளிக்கிழமை வருகிறது.

மகாசிவராத்திரி நாளில் சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. எனவே இந்த நாளே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. சாஸ்திரங்களின்படி, மக் கிருஷ்ண பக்ஷத்தின் சதுர்த்தசி திதியில் பார்வதி தேவி, சங்கரரை மணந்தார். இந்த மங்களகரமான நாளை மனதில் வைத்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியின் புனித நாளில், முறையான வழிபாட்டைப் பின்பற்றுவது பல நல்ல பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது.

மகாசிவராத்திரி நாளில் செய்யப்படும் சில பூஜைகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான வழியைக் காட்டுகின்றன. உங்கள் நிதி சிக்கல்களிலிருந்து வெளியேற விரும்பினால், இதைச் செய்யுங்கள்.

சனாதன தர்மத்தில் மஹாசிவராத்திரிக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. 

இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து பூஜை செய்து சிவபெருமானின் அருளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் செய்யப்படும் சில பூஜைகள் உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

மகாசிவராத்திரி நாளில் வீட்டில் சிவலிங்கம் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. சிவலிங்கத்தை வளர்த்தால் அதன் அளவு பெரிதாக இருக்கக் கூடாது. தினமும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் இதை வழிபடுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு ஷமி இலைகள் வழங்கவும். இதையடுத்து பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண சிவபெருமானை வழிபட்டால் பணப்பிரச்சனை தீரும்.

தொழிலில் முன்னேற்றம் அடைய மகாசிவராத்திரி தினத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று 11 தீபம் ஏற்றி, அதே நேரத்தில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மகாசிவராத்திரி நாளில், மஹாதேவரின் விசேஷ ஆசீர்வாதங்களைப் பெறலாம். நீங்கள் இரவில் விழித்திருக்கும்போது, சிவ புராணம் அல்லது சிவ சகஸ்ரநாமத்தைக் கேட்கலாம். சங்கரர் உங்களுக்கு செழிப்பை அளிப்பவர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி