தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Virudhunagar : சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 33 வயது பெண் - பகீர் சம்பவம்!

Virudhunagar : சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 33 வயது பெண் - பகீர் சம்பவம்!

Divya Sekar HT Tamil

Jan 31, 2023, 12:28 PM IST

Virudhunagar sexually assaulted : செங்கல்சூளையில் 17 வயது சிறுவனை 33 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Virudhunagar sexually assaulted : செங்கல்சூளையில் 17 வயது சிறுவனை 33 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Virudhunagar sexually assaulted : செங்கல்சூளையில் 17 வயது சிறுவனை 33 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் : ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது பெண் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். இதே செங்கல்சூளையில் 17 வயது சிறுவனும் வேலைபார்த்து வருகிறான். 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில் இருவரையும் காணவில்லை. சக தொழிலாளிகள் மற்றும் இருவரது குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி இருவரது உறவினர்களும் இதுகுறித்து சேத்தூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

இந்த புகாரின் அப்படையில் சேத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அவர்கள் இருவரும் கன்னியாகுமரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க கன்னியாகுமரிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அதன்படி அங்கு சென்று இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றனர்.

ஆனால் போலீசாரை கண்டதும் இருவரும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து, போலீசார் இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து சேத்தூர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

சிறுவனுடன் நெருங்கி பழகிய அந்த பெண் ஒரு கட்டத்தில் சிறுவனை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல் அடிக்கடி அவனுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் சிறுவனும் அந்த பெண்ணுடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்தனர். அதன்படி கடந்த 19ஆம் தேதி இருவரும் செங்கல்சூளையில் இருந்து மாயமாகியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தில் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் சிறுவனுக்கு அறிவுரை கூறி அவனது பெற்றோரிடம் பத்திரமாக அனுப்பி வைத்தனர். செங்கல்சூளையில் 17 வயது சிறுவனை 33 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி